திங்கள், 14 செப்டம்பர், 2015

காவிரி வடகரை தலங்கள் 

முப்பத்தொன்றாவது தலம் 

ஓமாம்புலியூர் 

மூலவர் - பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்)







அம்பாள் - பூங்கொடி நாயகி 






தலமரம் - வதரி ( இலந்தை மரம் )
தீர்த்தம் - கொள்ளிடம் , கெளரி தீர்த்தம்

புராண பெயர் - உமாப்புலியூர், திருவோமாம் புலியூர்
தற்போதைய பெயர் - ஓமாம்புலியூர்
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர் , சுந்தரர் 

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 31வது தலம்.
*
சிவனார் தட்சிணாமூர்த்தியாக உமையம்மைக்கு பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்த தலம். சிவனார் தட்சிணாமூர்த்தியாக அம்மைக்கு உபதேசித்ததால் இது சிறந்த தட்சிணாமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது












*
ஓமம் - வேள்விச் சிறப்புடைய தலம் 
*
தீர்த்தக்கரையில் தனியே வடதளி சிவாலயம் 
*
அம்மைக்கு உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி கோயிலுக்குள் மூலமூர்த்தியாக அம்மையப்பர் சந்நிதிகளுக்கிடையில் உயர்ந்த பீடத்தில் திருக்காட்சி. இப்படிப்பட்ட அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. தட்சிணாமூர்த்தி தலங்களில் தலைசிறந்ததாக கருதப்படும் தலம் 
*
இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது. 
*
சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்துடன் மூலவர் திருக்காட்சி 
*
சுவாமி சந்நிதியின் ஒருபுறம் திருமாலுக்கு சக்கரம் அளிப்பதும் , மறுபுறம் பஞ்ச புலியூர்களும் சிற்பங்களாக 


*
கோஷ்டத்தில் வியாக்ரபாதருக்கு காட்சி தந்த நடராஜர் சிலாரூபம் 



*
நடராஜர் இடத்தில் தட்சிணாமூர்த்தியும் , தட்சிணாமூர்த்தி இடத்தில் நடராஜரும் வீற்றிருந்து அருளுவது சிறப்பு 
*
அம்பாள் சந்நிதி தனிச்சிறப்புடன் 
*
மாசிமகத்தன்று பிரம்மோற்சவம் , நவராத்திரி , சிவராத்திரி , கார்த்திகை சோமவாரங்கள் முதலான திருவிழாக்கள் 
*
சிவனார் வேடனுக்கு அருள் புரிந்த தலமாக சொல்லப்படுகிறது 







*
பழமண்ணிப்படிக்கரை தலம் அருகிலுள்ளது 
*
குருபெயர்ச்சி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது. வியாழக்கிழமை மற்றும் குரு பெயர்ச்சி காலங்களில் இங்குள்ள குரு பகவானுக்கு விசேஷ அபிசேக ஆராதனை செய்கிறார்கள்.
*
கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வழிபடவேண்டிய தலம் 

*
திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்தது என்றும், ஹோம புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார். உமாதேவி அருள் பெற்ற தலம் என்பதால் "உமாப்புலியூர்' என்ற பெயர் "ஓமாப்புலியூர்' என மாறிவிட்டதாகவும் கூறுகின்றனர்













தரிசன நேரம் 

காலை 07:00 - 11:00 &
மாலை 05:30 - 07:30

தொடர்புக்கு 

04144-264845

சிதம்பரத்தில் இருந்தும் காட்டுமன்னார் கோயிலில் இருந்தும் இத்தலத்தை வந்தடையலாம். காட்டுமன்னார்குடியில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்
காவிரி வடகரை தலங்கள் 

முப்பதாவது தலம் 

பழமண்ணிப்படிக்கரை தற்போது இலுப்பைப்பட்டு 

மூலவர் - நீலகண்டேஸ்வரர் , படிக்கரைநாதர் , மகதீஸ்வரர் பரமேஸ்வரர் , முத்தீஸ்வரர் 


அம்பாள் - அமிர்தகரவல்லி , மங்களநாயகி 


தலமரம் - இலுப்பை மரம் 

தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம் , அமிர்த தீர்த்தம் 

புராண பெயர் - பழமண்ணிப்படிக்கரை
திருமண்ணிப் படிக்கரை
தற்போதைய பெயர் - இலுப்பைபட்டு
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சுந்தரர் 

* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில்இது 30வது தலம்.
* சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி அவ்விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த தலம் 

* பாண்டவர்கள் சித்திரை பெளர்ணமி நாளில் இத்தலம் வந்து பஞ்ச லிங்கங்களையும் வழிபட்டதாக வரலாறு 
- தருமர் வழிபட்டது நீலகண்டேஸ்வரர் 
- பீமன் வழிபட்டது மகதீஸ்வரர் 
- அர்ஜூனன் வழிபட்டது படிக்கரைநாதர் 
- நகுலன் வழிபட்டது பரமேஸ்வரர் 
- சகாதேவன் வழிபட்டது முத்தீஸ்வரர் 
* இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி திருக்காட்சி தருகிறார்.
* சகாதேவன் வழிபட்ட முத்தீஸ்வரர், தெற்கு நோக்கி திருக்காட்சி தருகிறார். சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரை வழிபட்டால் நலம் கிடைக்கும் என்ற வரலாறு சொல்லப்படுகிறது 
* இத்தலத்தில் வேண்டிக்கொண்டால் சனியின் ஆதிக்கம் குறையும் என்பது நம்பிக்கை
* பிரம்மன் , மாந்ததா , நளன் வழிபட்ட தலம் 
* திரெளபதி வழிபட்ட வலம்புரி விநாயகர் , நடன விநாயகர் என இரு விநாயகர் சந்நிதிகள் 

* கோயிலுக்கு எதிரே வெளியில் விஜய விநாயகர் இருக்கிறார். 
* மூலவர் கிழக்கு நோக்கி திருக்காட்சி 
* சிவனாரின் சன்னதிக்கு பின்புறம் அமிர்தவல்லி அம்மைக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அமிர்தவல்லி அம்பாள் தன் இடது கையால் பாதத்தை காட்டியபடி அருளுவது சிறப்பு. கணவனை காத்த அம்பாள் என்பதால் இவரை வழிபட்டால் பெண்களுக்கு கணவன் மீது பாசம் அதிகரிக்கும், தீர்க்க சுமங்கலிகளாக வாழலாம் என்பது நம்பிக்கை. 
* மேல் மண்டபத்தில் வலப்புறம் தனிக்கோயிலில் படிக்கரைநாதரும் , மங்களநாயகியும் அருள் புரிகின்றனர் 
* பிரம்மோற்சவம் சித்திரை பெளர்ணமியில் ஏகதின உற்சவமாக நடைபெறுகிறது 
* சிவராத்திரி , நவராத்திரி , நடராஜர் அபிஷேகங்கள் , சஷ்டி ,சித்ரையில் 10 நாள் பிரம்மோற்ஸவம், திருக்கார்த்திகை முதலான உற்சவங்கள் 



* இந்திரன் , விபாண்டகர் , துந்து வழிபட்டு அருள் பெற்ற தலம் 
* இத்தலத்திலிருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் சிவன், அர்ஜுனனின் வாளை ஒழித்து வைத்து அருள் செய்த திருவாளொளிப்புற்றூர் கோயில் அமைந்துள்ளது.
* நோய்கள் நீங்குவதற்கு, பணியில் சிறப்பிடம் பெறுவதற்கு வழிபடவேண்டிய தலம் 



* பீமன் வழிபட்ட சிவனார், சோடஷலிங்கமாக, 16 பட்டைகளுடன் இருக்கிறார்.பதினாறு பேறுகளும் பெற சோடஷலிங்க சன்னதியில் வழிபடவேண்டும் என்ற வரலாறும் சொல்லப்படுகிறது 

தரிசன நேரம் 

காலை 06:00 - 11:30 &
மாலை 03:30 - 07:30

தொடர்புக்கு 

92456-19738

வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு , வாளப்புத்தூர் தாண்டி மணல்மேடு ஊரையடைந்து பஞ்சாலையைத் தாண்டி பாப்பாகுடி ஊரைக்கடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.

மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. மணல்மேடு பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து சுமார் 1 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.