காவிரி வடகரை தலங்கள்
முப்பத்தொன்றாவது தலம்
ஓமாம்புலியூர்
மூலவர் - பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்)
அம்பாள் - பூங்கொடி நாயகி
தலமரம் - வதரி ( இலந்தை மரம் )
தீர்த்தம் - கொள்ளிடம் , கெளரி தீர்த்தம்
புராண பெயர் - உமாப்புலியூர், திருவோமாம் புலியூர்
தற்போதைய பெயர் - ஓமாம்புலியூர்
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர் , சுந்தரர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 31வது தலம்.
* சிவனார் தட்சிணாமூர்த்தியாக உமையம்மைக்கு பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்த தலம். சிவனார் தட்சிணாமூர்த்தியாக அம்மைக்கு உபதேசித்ததால் இது சிறந்த தட்சிணாமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது
* ஓமம் - வேள்விச் சிறப்புடைய தலம்
* தீர்த்தக்கரையில் தனியே வடதளி சிவாலயம்
* அம்மைக்கு உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி கோயிலுக்குள் மூலமூர்த்தியாக அம்மையப்பர் சந்நிதிகளுக்கிடையில் உயர்ந்த பீடத்தில் திருக்காட்சி. இப்படிப்பட்ட அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. தட்சிணாமூர்த்தி தலங்களில் தலைசிறந்ததாக கருதப்படும் தலம்
* இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது.
* சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்துடன் மூலவர் திருக்காட்சி
* சுவாமி சந்நிதியின் ஒருபுறம் திருமாலுக்கு சக்கரம் அளிப்பதும் , மறுபுறம் பஞ்ச புலியூர்களும் சிற்பங்களாக
* கோஷ்டத்தில் வியாக்ரபாதருக்கு காட்சி தந்த நடராஜர் சிலாரூபம்
* நடராஜர் இடத்தில் தட்சிணாமூர்த்தியும் , தட்சிணாமூர்த்தி இடத்தில் நடராஜரும் வீற்றிருந்து அருளுவது சிறப்பு
* அம்பாள் சந்நிதி தனிச்சிறப்புடன்
* மாசிமகத்தன்று பிரம்மோற்சவம் , நவராத்திரி , சிவராத்திரி , கார்த்திகை சோமவாரங்கள் முதலான திருவிழாக்கள்
* சிவனார் வேடனுக்கு அருள் புரிந்த தலமாக சொல்லப்படுகிறது
* பழமண்ணிப்படிக்கரை தலம் அருகிலுள்ளது
* குருபெயர்ச்சி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது. வியாழக்கிழமை மற்றும் குரு பெயர்ச்சி காலங்களில் இங்குள்ள குரு பகவானுக்கு விசேஷ அபிசேக ஆராதனை செய்கிறார்கள்.
* கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வழிபடவேண்டிய தலம்
* திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்தது என்றும், ஹோம புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார். உமாதேவி அருள் பெற்ற தலம் என்பதால் "உமாப்புலியூர்' என்ற பெயர் "ஓமாப்புலியூர்' என மாறிவிட்டதாகவும் கூறுகின்றனர்
தரிசன நேரம்
காலை 07:00 - 11:00 &
மாலை 05:30 - 07:30
தொடர்புக்கு
04144-264845
சிதம்பரத்தில் இருந்தும் காட்டுமன்னார் கோயிலில் இருந்தும் இத்தலத்தை வந்தடையலாம். காட்டுமன்னார்குடியில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்
முப்பத்தொன்றாவது தலம்
ஓமாம்புலியூர்
மூலவர் - பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்)
அம்பாள் - பூங்கொடி நாயகி
தலமரம் - வதரி ( இலந்தை மரம் )
தீர்த்தம் - கொள்ளிடம் , கெளரி தீர்த்தம்
புராண பெயர் - உமாப்புலியூர், திருவோமாம் புலியூர்
தற்போதைய பெயர் - ஓமாம்புலியூர்
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர் , சுந்தரர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 31வது தலம்.
* சிவனார் தட்சிணாமூர்த்தியாக உமையம்மைக்கு பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்த தலம். சிவனார் தட்சிணாமூர்த்தியாக அம்மைக்கு உபதேசித்ததால் இது சிறந்த தட்சிணாமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது
* ஓமம் - வேள்விச் சிறப்புடைய தலம்
* தீர்த்தக்கரையில் தனியே வடதளி சிவாலயம்
* அம்மைக்கு உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி கோயிலுக்குள் மூலமூர்த்தியாக அம்மையப்பர் சந்நிதிகளுக்கிடையில் உயர்ந்த பீடத்தில் திருக்காட்சி. இப்படிப்பட்ட அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. தட்சிணாமூர்த்தி தலங்களில் தலைசிறந்ததாக கருதப்படும் தலம்
* இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது.
* சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்துடன் மூலவர் திருக்காட்சி
* சுவாமி சந்நிதியின் ஒருபுறம் திருமாலுக்கு சக்கரம் அளிப்பதும் , மறுபுறம் பஞ்ச புலியூர்களும் சிற்பங்களாக
* கோஷ்டத்தில் வியாக்ரபாதருக்கு காட்சி தந்த நடராஜர் சிலாரூபம்
* நடராஜர் இடத்தில் தட்சிணாமூர்த்தியும் , தட்சிணாமூர்த்தி இடத்தில் நடராஜரும் வீற்றிருந்து அருளுவது சிறப்பு
* அம்பாள் சந்நிதி தனிச்சிறப்புடன்
* மாசிமகத்தன்று பிரம்மோற்சவம் , நவராத்திரி , சிவராத்திரி , கார்த்திகை சோமவாரங்கள் முதலான திருவிழாக்கள்
* சிவனார் வேடனுக்கு அருள் புரிந்த தலமாக சொல்லப்படுகிறது
* பழமண்ணிப்படிக்கரை தலம் அருகிலுள்ளது
* குருபெயர்ச்சி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது. வியாழக்கிழமை மற்றும் குரு பெயர்ச்சி காலங்களில் இங்குள்ள குரு பகவானுக்கு விசேஷ அபிசேக ஆராதனை செய்கிறார்கள்.
* கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வழிபடவேண்டிய தலம்
* திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்தது என்றும், ஹோம புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார். உமாதேவி அருள் பெற்ற தலம் என்பதால் "உமாப்புலியூர்' என்ற பெயர் "ஓமாப்புலியூர்' என மாறிவிட்டதாகவும் கூறுகின்றனர்
தரிசன நேரம்
காலை 07:00 - 11:00 &
மாலை 05:30 - 07:30
தொடர்புக்கு
04144-264845
சிதம்பரத்தில் இருந்தும் காட்டுமன்னார் கோயிலில் இருந்தும் இத்தலத்தை வந்தடையலாம். காட்டுமன்னார்குடியில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக