சனி, 17 அக்டோபர், 2015

காவிரி வடகரை தலங்கள் 

முப்பத்திமூன்றாம் தலம் 

திருநாரையூர் 

மூலவர் - செளந்தரேஸ்வரர் 




அம்பாள் - திரிபுரசுந்தரி 




தலமரம் - புன்னாக மரம்

தீர்த்தம் - காருண்ய தீர்த்தம் , செங்கழுநீர் 
புராண பெயர் - திருநாரையூர்
தற்போதைய பெயர் - திருநாரையூர்
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர், சம்பந்தர்

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 33வது தலம்.
*
துர்வாசர் சாபம் பெற்ற கந்தர்வன் நாரை வடிவில் சிவனாரை வழிபட்டு அருள் பெற்ற தலம்


*
நம்பியாண்டார் நம்பி பிறந்த தலம் 

*
இத்தல நாயகனாக விசேஷமாக சொல்லப்படுபவர் பொல்லாப் பிள்ளையார்


 
*
பொல்லாப் பிள்ளையாரின் துணை கொண்டே நம்பியாண்டார் நம்பியும் , ராஜராஜ சோழனும் தில்லையில் மறைக்கப்பட்டிருந்த தேவார பாடல்களை மீட்டெடுத்ததாக வரலாறு 





*
எருக்கத்தம்புலியூரில் யாழ்பாணர் மரபில் பிறந்த ஏந்திசைப்பாடினி என்ற ஊமைப்பெண் பொல்லாப் பிள்ளையாரின் அருளால் பேசும் திறன் பெற்று தேவார பதிகங்களுக்கு பண் அமைத்து தந்ததாக சொல்லப்படுகிறது 
*
நால்வர் சந்நிதியில் சேக்கிழார் , அகத்தியர் , பக முனிவரும் உள்ளனர் 
*
பொல்லாப் பிள்ளையார் வலம்புரி விநாயகராக திருக்காட்சி. பொல்லாப்பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார்.






*
இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி விநாயகரின் ஆறாவது படை வீடாகும். 
*
பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவகிரகம், சனி பகவான், பைரவர், சூரியன் முதலானோரின் சந்நிதிகள் 







*
உற்சவ திருமேனிகளான நாரை , பொல்லாப் பிள்ளையார் , ராஜராஜ சோழன் , சந்திரசேகரர் , நால்வர் குறிப்பிடத்தக்கவை 

*
கோயிலுக்கு எதிரில் நம்பியாண்டார் நம்பி இல்லம் 
*
புனர்பூச நாளில் நம்பியாண்டார் நம்பி குருபூஜை
*
தட்சிணாமூர்த்தியும் , துர்க்கையும் தனிச்சந்நிதிகளில் 

*
சிவனார் கிழக்கு நோக்கி திருக்காட்சி 
*
வைகாசி திருவாதிரை, ராஜராஜனுக்கு 13 நாள் திருவிழா, விநாயகர் சதுர்த்தி முதலான திருவிழாக்கள் 






*
ஒவ்வொரு வருடமும் வைகாசித் திங்கள் புணர்பூச நட்சத்திரத்தில் (ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி முக்தி அடைந்தநாள்) நம்பி குருபூஜை விழா சிறந்த திருமுறை விழாவாக கொண்டாடப்படும் தலம் 




*
கோவிலுக்கு வெளியே சற்று தூரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி அவதரித்து வசித்து வந்த இடத்தில் தற்போது சிறிய மண்டபத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி சிற்ப வடிவில் உள்ளார் 

தரிசன நேரம் 

காலை 06:30 - 11:30 &
மாலை 04:30 - 07:30

தொடர்புக்கு 

04144 - 208879 ,
94425 - 71039, 
94439 - 06219

சிதம்பரம் - காட்டுமன்னார் கோயில் சாலையில் உள்ள குமராட்சியை அடுத்துள்ள திருநாரையூர் சாலையில் 1 கிமீ பயணித்தால் இவ்வாலயத்தை அடையலாம் . சிதம்பரத்தில் இருந்து 16 கிமீ தொலைவிலும் , காட்டுமன்னார் கோயிலில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இச்சிவத்தலம்
காவிரி வடகரை தலங்கள் 

முப்பத்திரண்டாவது தலம் 

கானாட்டுமுள்ளூர் தற்போது கானாட்டம் புலியூர்

மூலவர் - பதஞ்சலிநாதர் @ பதஞ்சலீஸ்வரர்






அம்பாள் - அம்புஜாட்சி என்கிற கானார்குழலி   கோல்வளைக்கையம்பிகை






தலமரம் - வெள்ளெருக்கு 
தீர்த்தம் - சூரிய தீர்த்தம் 



புராண பெயர் - திருக்கானாட்டுமுள்ளூர்
தற்போதைய பெயர் - கானாட்டம்புலியூர்
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சுந்தரர்

* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 32வது தலம்.
* மிகப்பழமையான சிவத்தலம் , செங்கற்களால் ஆன கோயில் 
* பதஞ்சலி முனிவர் சிலை 


* மூலவர் மிகக் குட்டையான பாணத்துடன் கிழக்கு நோக்கி திருக்காட்சி 
* அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி திருக்காட்சி தருகிறார். இவரை 'அம்புஜாட்சி', 'கானார்குழலி' என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். சுந்தரர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியுள்ளார். 
* கருவறை கோஷ்டத்தின் பின்புறம் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு நேரே இருக்கும் முருகனும் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இதில் வள்ளி காதில் மூதாட்டிகள் அணியும் பாம்படம் (தண்டட்டி) அணிந்த கோலத்தில் இருப்பது சிறப்பு.






* தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை.





* நடராஜர், தனது இடது காலை முன்புறமாக தள்ளி தூக்கி நிறுத்தி, உடலை பின்புறமாக சாய்த்தபடி இருக்கிறார். 



* அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார் 
* பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர், கஜலட்சுமி முதலானோரின் சன்னதிகள் உள்ளது









* முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது. 

* பதஞ்சலி முனிவர் வழிபட்டு அருள் பெற்ற தலம்

* சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை முதலான திருவிழாக்கள்
* நன்றாக பணி செய்தும் சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள், பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்கள், நாக தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம் 








* தமிழ் வருடப்பிறப்பின் போது 3 நாட்கள் சூரிய வழிபாடு நடைபெறும் தலம் 
* இத்தலத்திற்கு அருகிலேயே வியாக்ரபாதர் வழிபட்ட ஓமாம்புலியூர் தலம் இருக்கிறது. ஒரே வரிசையில் சிதம்பரம், கானாட்டம்புலியூர், ஓமாம்புலியூர் ஆகிய மூன்று தலங்கள் அமைந்திருப்பது சிறப்பு.
















தரிசன நேரம் 

காலை 07:00 - 11:00 &
மாலை 05:00 - 07:00

பிற நேரங்களில் அர்ச்சகரை தொடர்புகொண்டு அழைத்துச்சென்று சுவாமியை தரிசனம் செய்யலாம்.

தொடர்புக்கு 

04144 - 208091 ,
04144 - 208508 ,
93457 - 78863.

சிதம்பரம் - காட்டுமன்னார்குடி - ஓமாம்புலியூர் சாலையில் மோவூர் , பின் இடப்புறமாக செல்லும் முட்டம் சாலையில் சென்று முட்டம் , முட்டம் ஊருக்குள் செல்லும் சாலையில் 1 கிமீ சென்றால் இச்சிவத்தலத்தை அடையலாம் . சாலை சற்று குறுகலானது.

சிதம்பரத்தில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் சென்று , அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம்.