சனி, 17 அக்டோபர், 2015

காவிரி வடகரை தலங்கள் 

முப்பத்திரண்டாவது தலம் 

கானாட்டுமுள்ளூர் தற்போது கானாட்டம் புலியூர்

மூலவர் - பதஞ்சலிநாதர் @ பதஞ்சலீஸ்வரர்






அம்பாள் - அம்புஜாட்சி என்கிற கானார்குழலி   கோல்வளைக்கையம்பிகை






தலமரம் - வெள்ளெருக்கு 
தீர்த்தம் - சூரிய தீர்த்தம் 



புராண பெயர் - திருக்கானாட்டுமுள்ளூர்
தற்போதைய பெயர் - கானாட்டம்புலியூர்
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சுந்தரர்

* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 32வது தலம்.
* மிகப்பழமையான சிவத்தலம் , செங்கற்களால் ஆன கோயில் 
* பதஞ்சலி முனிவர் சிலை 


* மூலவர் மிகக் குட்டையான பாணத்துடன் கிழக்கு நோக்கி திருக்காட்சி 
* அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி திருக்காட்சி தருகிறார். இவரை 'அம்புஜாட்சி', 'கானார்குழலி' என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். சுந்தரர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியுள்ளார். 
* கருவறை கோஷ்டத்தின் பின்புறம் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு நேரே இருக்கும் முருகனும் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இதில் வள்ளி காதில் மூதாட்டிகள் அணியும் பாம்படம் (தண்டட்டி) அணிந்த கோலத்தில் இருப்பது சிறப்பு.






* தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை.





* நடராஜர், தனது இடது காலை முன்புறமாக தள்ளி தூக்கி நிறுத்தி, உடலை பின்புறமாக சாய்த்தபடி இருக்கிறார். 



* அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார் 
* பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர், கஜலட்சுமி முதலானோரின் சன்னதிகள் உள்ளது









* முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது. 

* பதஞ்சலி முனிவர் வழிபட்டு அருள் பெற்ற தலம்

* சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை முதலான திருவிழாக்கள்
* நன்றாக பணி செய்தும் சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள், பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்கள், நாக தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம் 








* தமிழ் வருடப்பிறப்பின் போது 3 நாட்கள் சூரிய வழிபாடு நடைபெறும் தலம் 
* இத்தலத்திற்கு அருகிலேயே வியாக்ரபாதர் வழிபட்ட ஓமாம்புலியூர் தலம் இருக்கிறது. ஒரே வரிசையில் சிதம்பரம், கானாட்டம்புலியூர், ஓமாம்புலியூர் ஆகிய மூன்று தலங்கள் அமைந்திருப்பது சிறப்பு.
















தரிசன நேரம் 

காலை 07:00 - 11:00 &
மாலை 05:00 - 07:00

பிற நேரங்களில் அர்ச்சகரை தொடர்புகொண்டு அழைத்துச்சென்று சுவாமியை தரிசனம் செய்யலாம்.

தொடர்புக்கு 

04144 - 208091 ,
04144 - 208508 ,
93457 - 78863.

சிதம்பரம் - காட்டுமன்னார்குடி - ஓமாம்புலியூர் சாலையில் மோவூர் , பின் இடப்புறமாக செல்லும் முட்டம் சாலையில் சென்று முட்டம் , முட்டம் ஊருக்குள் செல்லும் சாலையில் 1 கிமீ சென்றால் இச்சிவத்தலத்தை அடையலாம் . சாலை சற்று குறுகலானது.

சிதம்பரத்தில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் சென்று , அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக