புதன், 2 டிசம்பர், 2015

காவிரி வடகரை தலங்கள் 

35.
பந்தணை நல்லூர் தற்போது பந்தநல்லூர் 

மூலவர் - பசுபதீஸ்வரர் 

அம்பாள் - வேணு புஜாம்பிகை @ காம்பணையதோளி

தலமரம் - சரக்கொன்றை மரம் 
தீர்த்தம் - சூரிய தீர்த்தம் 


புராண பெயர் - பந்தணைநல்லூர்
தற்போதைய பெயர் - பந்தநல்லூர்
மாவட்டம் - தஞ்சாவூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள - சம்பந்தர், அப்பர் 

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 35வது தலம். 
*
அம்பிகை ஆடிய பந்தை இறைவன் எற்ற அப்பந்து வந்து அணைந்த தலம் 
*
காம்பீலி மன்னனின் மகன் குருடு நீங்கிய தலம் 
*
காமதேனு , திருமால் , கண்வர் , வாலி , இந்திரன் , பிரம்மன் , சூரியன் வழிபட்ட தலம் 
*
மூலவர் குட்டையான பாணத்துடன் வெண்மை நிறமாக சிரசில் பசுவின் குளம்புச்சுவடோடு திருக்காட்சி 
*
காளி சந்நிதி 
*
நுழைவு வாயிலில் கோட்டை முனியாண்டவர் அருள்பாலிக்கிறார். 
*
இத்தல விநாயகர் நிருதி கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 



*
உள்பிரகாரத்தில் நவலிங்கங்கள், முருகன், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் (நேர்கோட்டில்) முதலானோரின் சந்நிதிகள் .



*
சிவனாரின் திருமணத்தை நவகிரகங்கள் நேர்கோட்டில் நின்று தரிசிப்பதால், அனைத்தும் அனுக்கிரக மூர்த்திகளாக விளங்குகின்றன. நவகிரக தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம் 

*
ஆதிகேசவப் பெருமாள் பரிமளவல்லித் தாயாருடன் தனிக்கோயிலில் 

*
கல்யாணசுந்தரர் சந்நிதி . இவரின் பீடத்தில் தலவரலாறு சிற்பம் 


*
நால்வர் சந்நிதியில் சம்பந்தர் பெரிய வடிவில் 
*
வண்ணச் சுதையில் சட்டநாதர் சந்நிதி 
*
அன்னபூரணி சந்நிதி 
*
நவக்கிரகங்கள் ஒரே வரிசையாக 
*
பிட்சாடனர் திருவடிவம் 
*
மூலவர் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கியும் , அம்பாள் வடக்கு நோக்கி தவக்கோலத்திலும் திருக்காட்சி 
*
அம்பாள் சந்நிதியின் இருபுறமும் காவலாக அய்யனாரும் , காளியும்
*
தேவகன்னியர்கள் வழிபட்ட தலம் 
*
மாசிமகத்தன்று பிரம்மோற்சவம் 
*
மாசி மகம், பங்குனி உத்திரம், சிவராத்திரி, மார்கழி திருவாதிரை முதலான திருவிழாக்கள் 



*
கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள், பித்ருக்களால் ஏற்படும் தோஷம் நீங்க , திருமணத்தடை உள்ளவர்கள், மனநிலை பாதிப்பு கொண்டவர்கள், பயந்த சுபாவம் உள்ளவர்கள், கடனால் பாதிக்கப்பட்டவர்கள் முதலியோர் வழிபடவேண்டிய தலம் 



பக்தர்களின் ஆதரவு தேவைப்படும் தலம் 

தரிசன நேரம் 

காலை 06:00 - 12:00 &
மாலை 04:00 - 08:00

தொடர்புக்கு 

0435 - 2450595 ,
0435 - 2450595 , 
98657 - 78045

மயிலாடுதுறை - திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். 
கும்பகோணத்திலிருந்து (30 கி.மீ.) சென்னை செல்லும் வழியில் திருப்பனந்தாள் அருகே அமைந்துள்ள பந்தநல்லூர் தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து வருபவர்கள் குத்தாலம் வழியாக பந்தநல்லூர் வரலாம்.
காவிரி வடகரை தலங்கள்

34.
திருக்கடம்பூர் தற்போது மேலைக்கடம்பூர் 

மூலவர் - அமிர்தகடேஸ்வரர் 


























அம்பாள் - ஜோதி மின்னம்மை @ வித்யூஜோதிநாயகி















தலமரம் - கடம்பு மரம் 
தீர்த்தம் - சக்தி தீர்த்தம் 

புராண பெயர் - திருக்கடம்பூர்
தற்போதைய பெயர் - மேலக்கடம்பூர்
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், அப்பர்

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 34வது தலம்.
*
தமிழ்நாட்டில் முதன்முதலில் கட்டப்பட்ட கரக்கோயில் என்ற பெருமையுடைய தலம் ( தேர் வடிவில் அமைந்த கோயில் ). விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. 

















*
குஞ்சிதபாத நடராஜர் சற்றே பின்புறமாக சாய்ந்தபடி சிவகாமியுடன் இருக்கிறார். 

































































































*
கோஷ்ட சுவரில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சிற்பமாக உள்ளது. 










































































*
வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன் இருக்க, அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. வைகுண்ட ஏகாதசியன்று இவருக்கு பூஜைகள் நடக்கிறது.










*
பின்புற சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். 










*
முருகர் வழிபட்டு வில்லும் , இந்திரன் வழிபட்டு அமுத கலசமும் பெற்ற சிறப்புடைய தலம் 
*
அங்காரகன் வழிபட்டு அருள் பெற்ற தலம் 
*
மூலவர் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி 
*
அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும், உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை, "வித்யஜோதிநாயகி' (வித்யா - சரஸ்வதி, ஜோதி - லட்சுமி, நாயகி - துர்க்கை) என்று அழைக்கின்றனர். இவளுக்கு "ஜோதிமின்னம்மை' என்றும் பெயர் உண்டு.
*
அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது.
*
கலையழகுடன் சிற்ப எழில்வாய்ந்த தலம் 
*
மூலவர் திருமேனி ஒரு பக்கம் சாய்ந்து உச்சி சற்று கூர்மையாக திருக்காட்சி 
*
நடராஜர் , சிவகாமியம்மை மூல மற்றும் உற்சவ ரூபங்கள்

 
*
மூல சிவனார் நவபாஷாணத்தால் செய்யப்பட்டவர். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது, இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு. 


*
சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.


*
மூலஸ்தான சுவரில் உள்ள சிவனாரின் ஆலிங்கனமூர்த்தி சிற்பம் தனிச்சிறப்பு வாய்ந்தது . 





கோஷ்டசுவரிலேயே கங்காதரரும் இருக்கின்றார்.



* விமானத்தில் தெட்சிணாமூர்த்தி புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும் காட்சியை தரிசிக்கலாம். 




*
இத்தலவிநாயகரின் திருநாமம் ஆரவார விநாயகர்.





















*
ரிஷபநாதர், அர்த்தநாரீஸ்வரர் , உமாமகேஸ்வரர் , பாபஹரேஸ்வரர் திருவுருவங்கள் 





*
பிரதோஷ காலத்தில் காட்சி கொடுக்கும் வேறெங்கும் காண முடியாத பிரதோஷ நாயகர் வடிவம் . இத்தலத்தில் "ரிஷபதாண்டவமூர்த்தி' நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன. 































*
சூரனை அழிக்கச்செல்லும் முன் முருகன் இங்கு அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார். எனவே, இங்குள்ள உற்சவர் முருகன் கையில் வில்லுடன் இருக்கிறார். 






























*
செவ்வாய் கிரகம், தனக்கு அதிபதியான முருகனை இத்தலத்தில் வழிபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இங்கு செவ்வாய் கிரகம் உற்சவராக இருக்கிறார்
*
பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.














































*
பிதுர்கடன் நிறைவேற்றுவதற்கான சிறப்புத் தலம் 
*
அருகில் உள்ள கீழைக்கடம்பூரில் வைப்புத் தலமான கடம்பூர் இளங்கோயில் 
*
சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், புரட்டாசியில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய உற்சவம் , நாயன்மார்கள் குருபூஜை , சனிப்பெயர்ச்சி , குருப்பெயர்ச்சி , பைரவாஷ்டமி , கந்தசஷ்டி முதலான திருவிழாக்கள் 


*
செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம். இங்கு சஷ்டியப்த பூர்த்தி, ஆயுள் விருத்தி ஹோமம் அதிகளவில் செய்து கொள்கிறார்கள்.
*
நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் சிவன் ஒவ்வொருநாளும், அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். எனவே, இத்தலம் கிரகதோஷ பரிகார தலமாகவும் இருக்கிறது. 
*
திருநாவுக்கரசர், "என் கடன் பணிசெய்து கிடப்பதே,'' என்று இத்தலத்தில்தான் பதிகம் பாடினார்.
*
கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா, சிவனை பூஜித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர். 
*
பிரம்மனுக்கு அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. நடராஜரின் நடனத்தை கண்ட மகிழ்ச்சியில் அவரை தன் தலை மீது வைத்துக்கொண்டாடினாராம் பதஞ்சலி. இதனை இச்சிற்பம் விளக்குவதாக சொல்கிறார்கள்.
*
துர்க்கை கட்டை விரல் இல்லாமல், சிம்ம வாகனத்துடன் இருக்கிறார். இவருக்கு கீழே மேரு மலை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருக்கிறது.

மேலும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களுக்கு 

kadamburtemple.blogspot.com &
www.facebook.com/vijay.kadambur

தரிசன நேரம் 

காலை 07:30 - 10:30
மாலை 05:00 - 08:00

தொடர்புக்கு 

04144-264638 ,
04144-264642 ,
93456-56982 ,
98426-76797

காட்டுமன்னார்குடி - எய்யலூர் சாலையில் முதலில் கீழைக்கடம்பூர் . அதன் பிறகு மேலைக்கடம்பூர்.

சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் உள்ள காட்டுமன்னார்குடி சென்று அங்கிருந்து 6 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம்