புதன், 2 டிசம்பர், 2015

காவிரி வடகரை தலங்கள் 

35.
பந்தணை நல்லூர் தற்போது பந்தநல்லூர் 

மூலவர் - பசுபதீஸ்வரர் 

அம்பாள் - வேணு புஜாம்பிகை @ காம்பணையதோளி

தலமரம் - சரக்கொன்றை மரம் 
தீர்த்தம் - சூரிய தீர்த்தம் 


புராண பெயர் - பந்தணைநல்லூர்
தற்போதைய பெயர் - பந்தநல்லூர்
மாவட்டம் - தஞ்சாவூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள - சம்பந்தர், அப்பர் 

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 35வது தலம். 
*
அம்பிகை ஆடிய பந்தை இறைவன் எற்ற அப்பந்து வந்து அணைந்த தலம் 
*
காம்பீலி மன்னனின் மகன் குருடு நீங்கிய தலம் 
*
காமதேனு , திருமால் , கண்வர் , வாலி , இந்திரன் , பிரம்மன் , சூரியன் வழிபட்ட தலம் 
*
மூலவர் குட்டையான பாணத்துடன் வெண்மை நிறமாக சிரசில் பசுவின் குளம்புச்சுவடோடு திருக்காட்சி 
*
காளி சந்நிதி 
*
நுழைவு வாயிலில் கோட்டை முனியாண்டவர் அருள்பாலிக்கிறார். 
*
இத்தல விநாயகர் நிருதி கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 



*
உள்பிரகாரத்தில் நவலிங்கங்கள், முருகன், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் (நேர்கோட்டில்) முதலானோரின் சந்நிதிகள் .



*
சிவனாரின் திருமணத்தை நவகிரகங்கள் நேர்கோட்டில் நின்று தரிசிப்பதால், அனைத்தும் அனுக்கிரக மூர்த்திகளாக விளங்குகின்றன. நவகிரக தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம் 

*
ஆதிகேசவப் பெருமாள் பரிமளவல்லித் தாயாருடன் தனிக்கோயிலில் 

*
கல்யாணசுந்தரர் சந்நிதி . இவரின் பீடத்தில் தலவரலாறு சிற்பம் 


*
நால்வர் சந்நிதியில் சம்பந்தர் பெரிய வடிவில் 
*
வண்ணச் சுதையில் சட்டநாதர் சந்நிதி 
*
அன்னபூரணி சந்நிதி 
*
நவக்கிரகங்கள் ஒரே வரிசையாக 
*
பிட்சாடனர் திருவடிவம் 
*
மூலவர் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கியும் , அம்பாள் வடக்கு நோக்கி தவக்கோலத்திலும் திருக்காட்சி 
*
அம்பாள் சந்நிதியின் இருபுறமும் காவலாக அய்யனாரும் , காளியும்
*
தேவகன்னியர்கள் வழிபட்ட தலம் 
*
மாசிமகத்தன்று பிரம்மோற்சவம் 
*
மாசி மகம், பங்குனி உத்திரம், சிவராத்திரி, மார்கழி திருவாதிரை முதலான திருவிழாக்கள் 



*
கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள், பித்ருக்களால் ஏற்படும் தோஷம் நீங்க , திருமணத்தடை உள்ளவர்கள், மனநிலை பாதிப்பு கொண்டவர்கள், பயந்த சுபாவம் உள்ளவர்கள், கடனால் பாதிக்கப்பட்டவர்கள் முதலியோர் வழிபடவேண்டிய தலம் 



பக்தர்களின் ஆதரவு தேவைப்படும் தலம் 

தரிசன நேரம் 

காலை 06:00 - 12:00 &
மாலை 04:00 - 08:00

தொடர்புக்கு 

0435 - 2450595 ,
0435 - 2450595 , 
98657 - 78045

மயிலாடுதுறை - திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். 
கும்பகோணத்திலிருந்து (30 கி.மீ.) சென்னை செல்லும் வழியில் திருப்பனந்தாள் அருகே அமைந்துள்ள பந்தநல்லூர் தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து வருபவர்கள் குத்தாலம் வழியாக பந்தநல்லூர் வரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக