காவிரி வடகரை தலங்கள்
34. திருக்கடம்பூர் தற்போது மேலைக்கடம்பூர்
மூலவர் - அமிர்தகடேஸ்வரர்
அம்பாள் - ஜோதி மின்னம்மை @ வித்யூஜோதிநாயகி
தலமரம் - கடம்பு மரம்
தீர்த்தம் - சக்தி தீர்த்தம்
புராண பெயர் - திருக்கடம்பூர்
தற்போதைய பெயர் - மேலக்கடம்பூர்
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், அப்பர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 34வது தலம்.
* தமிழ்நாட்டில் முதன்முதலில் கட்டப்பட்ட கரக்கோயில் என்ற பெருமையுடைய தலம் ( தேர் வடிவில் அமைந்த கோயில் ). விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது.
* குஞ்சிதபாத நடராஜர் சற்றே பின்புறமாக சாய்ந்தபடி சிவகாமியுடன் இருக்கிறார்.
* கோஷ்ட சுவரில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சிற்பமாக உள்ளது.
* வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன் இருக்க, அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. வைகுண்ட ஏகாதசியன்று இவருக்கு பூஜைகள் நடக்கிறது.
* பின்புற சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார்.
* முருகர் வழிபட்டு வில்லும் , இந்திரன் வழிபட்டு அமுத கலசமும் பெற்ற சிறப்புடைய தலம்
* அங்காரகன் வழிபட்டு அருள் பெற்ற தலம்
* மூலவர் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி
* அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும், உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை, "வித்யஜோதிநாயகி' (வித்யா - சரஸ்வதி, ஜோதி - லட்சுமி, நாயகி - துர்க்கை) என்று அழைக்கின்றனர். இவளுக்கு "ஜோதிமின்னம்மை' என்றும் பெயர் உண்டு.
* அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது.
* கலையழகுடன் சிற்ப எழில்வாய்ந்த தலம்
* மூலவர் திருமேனி ஒரு பக்கம் சாய்ந்து உச்சி சற்று கூர்மையாக திருக்காட்சி
* நடராஜர் , சிவகாமியம்மை மூல மற்றும் உற்சவ ரூபங்கள்
* மூல சிவனார் நவபாஷாணத்தால் செய்யப்பட்டவர். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது, இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு.
* சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
* மூலஸ்தான சுவரில் உள்ள சிவனாரின் ஆலிங்கனமூர்த்தி சிற்பம் தனிச்சிறப்பு வாய்ந்தது .
* கோஷ்டசுவரிலேயே கங்காதரரும் இருக்கின்றார்.
* விமானத்தில் தெட்சிணாமூர்த்தி புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும் காட்சியை தரிசிக்கலாம்.
* இத்தலவிநாயகரின் திருநாமம் ஆரவார விநாயகர்.
* ரிஷபநாதர், அர்த்தநாரீஸ்வரர் , உமாமகேஸ்வரர் , பாபஹரேஸ்வரர் திருவுருவங்கள்
* பிரதோஷ காலத்தில் காட்சி கொடுக்கும் வேறெங்கும் காண முடியாத பிரதோஷ நாயகர் வடிவம் . இத்தலத்தில் "ரிஷபதாண்டவமூர்த்தி' நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன.
* சூரனை அழிக்கச்செல்லும் முன் முருகன் இங்கு அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார். எனவே, இங்குள்ள உற்சவர் முருகன் கையில் வில்லுடன் இருக்கிறார்.
* செவ்வாய் கிரகம், தனக்கு அதிபதியான முருகனை இத்தலத்தில் வழிபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இங்கு செவ்வாய் கிரகம் உற்சவராக இருக்கிறார்
* பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.
* பிதுர்கடன் நிறைவேற்றுவதற்கான சிறப்புத் தலம்
* அருகில் உள்ள கீழைக்கடம்பூரில் வைப்புத் தலமான கடம்பூர் இளங்கோயில்
* சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், புரட்டாசியில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய உற்சவம் , நாயன்மார்கள் குருபூஜை , சனிப்பெயர்ச்சி , குருப்பெயர்ச்சி , பைரவாஷ்டமி , கந்தசஷ்டி முதலான திருவிழாக்கள்
* செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம். இங்கு சஷ்டியப்த பூர்த்தி, ஆயுள் விருத்தி ஹோமம் அதிகளவில் செய்து கொள்கிறார்கள்.
* நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் சிவன் ஒவ்வொருநாளும், அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். எனவே, இத்தலம் கிரகதோஷ பரிகார தலமாகவும் இருக்கிறது.
* திருநாவுக்கரசர், "என் கடன் பணிசெய்து கிடப்பதே,'' என்று இத்தலத்தில்தான் பதிகம் பாடினார்.
* கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா, சிவனை பூஜித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர்.
* பிரம்மனுக்கு அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. நடராஜரின் நடனத்தை கண்ட மகிழ்ச்சியில் அவரை தன் தலை மீது வைத்துக்கொண்டாடினாராம் பதஞ்சலி. இதனை இச்சிற்பம் விளக்குவதாக சொல்கிறார்கள்.
* துர்க்கை கட்டை விரல் இல்லாமல், சிம்ம வாகனத்துடன் இருக்கிறார். இவருக்கு கீழே மேரு மலை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருக்கிறது.
மேலும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களுக்கு
kadamburtemple.blogspot.com &
www.facebook.com/vijay.kadambur
தரிசன நேரம்
காலை 07:30 - 10:30
மாலை 05:00 - 08:00
தொடர்புக்கு
04144-264638 ,
04144-264642 ,
93456-56982 ,
98426-76797
காட்டுமன்னார்குடி - எய்யலூர் சாலையில் முதலில் கீழைக்கடம்பூர் . அதன் பிறகு மேலைக்கடம்பூர்.
சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் உள்ள காட்டுமன்னார்குடி சென்று அங்கிருந்து 6 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம்
34. திருக்கடம்பூர் தற்போது மேலைக்கடம்பூர்
மூலவர் - அமிர்தகடேஸ்வரர்
அம்பாள் - ஜோதி மின்னம்மை @ வித்யூஜோதிநாயகி
தலமரம் - கடம்பு மரம்
தீர்த்தம் - சக்தி தீர்த்தம்
புராண பெயர் - திருக்கடம்பூர்
தற்போதைய பெயர் - மேலக்கடம்பூர்
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், அப்பர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 34வது தலம்.
* தமிழ்நாட்டில் முதன்முதலில் கட்டப்பட்ட கரக்கோயில் என்ற பெருமையுடைய தலம் ( தேர் வடிவில் அமைந்த கோயில் ). விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது.
* குஞ்சிதபாத நடராஜர் சற்றே பின்புறமாக சாய்ந்தபடி சிவகாமியுடன் இருக்கிறார்.
* கோஷ்ட சுவரில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சிற்பமாக உள்ளது.
* வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன் இருக்க, அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. வைகுண்ட ஏகாதசியன்று இவருக்கு பூஜைகள் நடக்கிறது.
* பின்புற சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார்.
* முருகர் வழிபட்டு வில்லும் , இந்திரன் வழிபட்டு அமுத கலசமும் பெற்ற சிறப்புடைய தலம்
* அங்காரகன் வழிபட்டு அருள் பெற்ற தலம்
* மூலவர் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி
* அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும், உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை, "வித்யஜோதிநாயகி' (வித்யா - சரஸ்வதி, ஜோதி - லட்சுமி, நாயகி - துர்க்கை) என்று அழைக்கின்றனர். இவளுக்கு "ஜோதிமின்னம்மை' என்றும் பெயர் உண்டு.
* அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது.
* கலையழகுடன் சிற்ப எழில்வாய்ந்த தலம்
* மூலவர் திருமேனி ஒரு பக்கம் சாய்ந்து உச்சி சற்று கூர்மையாக திருக்காட்சி
* நடராஜர் , சிவகாமியம்மை மூல மற்றும் உற்சவ ரூபங்கள்
* மூல சிவனார் நவபாஷாணத்தால் செய்யப்பட்டவர். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது, இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு.
* சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
* மூலஸ்தான சுவரில் உள்ள சிவனாரின் ஆலிங்கனமூர்த்தி சிற்பம் தனிச்சிறப்பு வாய்ந்தது .
* கோஷ்டசுவரிலேயே கங்காதரரும் இருக்கின்றார்.
* விமானத்தில் தெட்சிணாமூர்த்தி புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும் காட்சியை தரிசிக்கலாம்.
* இத்தலவிநாயகரின் திருநாமம் ஆரவார விநாயகர்.
* ரிஷபநாதர், அர்த்தநாரீஸ்வரர் , உமாமகேஸ்வரர் , பாபஹரேஸ்வரர் திருவுருவங்கள்
* பிரதோஷ காலத்தில் காட்சி கொடுக்கும் வேறெங்கும் காண முடியாத பிரதோஷ நாயகர் வடிவம் . இத்தலத்தில் "ரிஷபதாண்டவமூர்த்தி' நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன.
* சூரனை அழிக்கச்செல்லும் முன் முருகன் இங்கு அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார். எனவே, இங்குள்ள உற்சவர் முருகன் கையில் வில்லுடன் இருக்கிறார்.
* செவ்வாய் கிரகம், தனக்கு அதிபதியான முருகனை இத்தலத்தில் வழிபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இங்கு செவ்வாய் கிரகம் உற்சவராக இருக்கிறார்
* பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.
* பிதுர்கடன் நிறைவேற்றுவதற்கான சிறப்புத் தலம்
* அருகில் உள்ள கீழைக்கடம்பூரில் வைப்புத் தலமான கடம்பூர் இளங்கோயில்
* சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், புரட்டாசியில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய உற்சவம் , நாயன்மார்கள் குருபூஜை , சனிப்பெயர்ச்சி , குருப்பெயர்ச்சி , பைரவாஷ்டமி , கந்தசஷ்டி முதலான திருவிழாக்கள்
* செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம். இங்கு சஷ்டியப்த பூர்த்தி, ஆயுள் விருத்தி ஹோமம் அதிகளவில் செய்து கொள்கிறார்கள்.
* நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் சிவன் ஒவ்வொருநாளும், அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். எனவே, இத்தலம் கிரகதோஷ பரிகார தலமாகவும் இருக்கிறது.
* திருநாவுக்கரசர், "என் கடன் பணிசெய்து கிடப்பதே,'' என்று இத்தலத்தில்தான் பதிகம் பாடினார்.
* கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா, சிவனை பூஜித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர்.
* பிரம்மனுக்கு அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. நடராஜரின் நடனத்தை கண்ட மகிழ்ச்சியில் அவரை தன் தலை மீது வைத்துக்கொண்டாடினாராம் பதஞ்சலி. இதனை இச்சிற்பம் விளக்குவதாக சொல்கிறார்கள்.
* துர்க்கை கட்டை விரல் இல்லாமல், சிம்ம வாகனத்துடன் இருக்கிறார். இவருக்கு கீழே மேரு மலை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருக்கிறது.
மேலும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களுக்கு
kadamburtemple.blogspot.com &
www.facebook.com/vijay.kadambur
தரிசன நேரம்
காலை 07:30 - 10:30
மாலை 05:00 - 08:00
தொடர்புக்கு
04144-264638 ,
04144-264642 ,
93456-56982 ,
98426-76797
காட்டுமன்னார்குடி - எய்யலூர் சாலையில் முதலில் கீழைக்கடம்பூர் . அதன் பிறகு மேலைக்கடம்பூர்.
சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் உள்ள காட்டுமன்னார்குடி சென்று அங்கிருந்து 6 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக