சனி, 1 ஆகஸ்ட், 2015

காவிரி வடகரை தலங்கள் 

இருபத்தொன்பதாம் தலம் 

திருவாழ்கொளிப்புத்தூர் தற்போது திருவாளப்புத்தூர் என்கிற வாளொளிப்புத்தூர் 

மூலவர் - மாணிக்கவண்ணர் ரத்னபுரீஸ்வரர் )






அம்பாள் - வண்டமர் பூங்குழலி ( பிரம்மகுந்தளாம்பிகை )






தலமரம் - வாகை மரம் 

தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம் 

புராண பெயர் - திருவாள்ஒளிப்புற்றூர், திருவாழ்கொளிபுத்தூர்
தற்போதைய பெயர் - திருவாளப்புத்தூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சுந்தரர், சம்பந்தர் 

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 29வது தலம்.
*
திருமால் மாணிக்க லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட தலம் 







*
அர்ஜுனனின் வாளை முதியவர் வடிவில் வந்த சிவனார் மறைத்து பின் வெளிப்படுத்தி அவனுக்கு அருள் செய்த தலம் 
*
அர்ஜூனன் , திருமால் , வண்டு வழிபட்ட தலம் 





*
நடராஜர் சபை தனிச்சிறப்புடன் 
*
துர்க்கை சந்நிதி விசேஷமானது.  மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த துர்க்கைஇத்தலத்தில் சிவனாரை வணங்கி ஆசிபெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது. துர்கையம்மன் கோஷ்டத்தில் எட்டு கைகளுடன்சிம்மவாகனத்துடன்திருக்காட்சி தருகிறார். இடது கீழ் கையில் கிளி இருப்பதும்ஆயுதங்களுடன் இருந்தாலும் சாந்த துர்க்கையாக அருளுவதும் விசேஷம். 


* மூலவர் சற்று உயர்ந்த பாணத்துடன் கிழக்கு நோக்கி திருக்காட்சி , திரிதள விமானத்தின் கீழ் அருளுகிறார்.

*
தலவிநாயகராக நிருதி விநாயகர் அருள்பாலிக்கிறார் 
*
கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சி தருகிறார். கருவறைக்கு எதிரே இருப்பதைப்போல இவருக்கு எதிரே ஒரு நந்தியும், பின்புறத்தில் மற்றொரு நந்தியும் இருக்கிறது. இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். 




*
தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு நேர் எதிரே மெய்க்கண்டநாயனாருக்கு சன்னதி இருக்கிறது. 
*
பிரகாரத்தில் அஷ்ட நாகங்கள் இருக்க, அதன் மத்தியில் விநாயகர் இருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய விநாயகர். புற்றிற்கு அடியில் சிவன் வெளிப்பட்ட தலம் என்பதால், விநாயகர் சன்னதியும் புற்றிற்குள் இருப்பதை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

*
இங்குள்ள நடராஜரின் காலுக்கு கீழே முயலகனும், நாகமும் இருக்கிறது.
*
கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு அருகில் திருமால், பிரம்மா இருவரும் வணங்கியபடி இருக்கின்றனர். 



*
கோயில் முகப்பில் சனீஸ்வரர், கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். 
*
பிரகாரத்தில் சுப்பிரமணியர் சந்நிதி தனிச்சிறப்புடன் 

*
கஜலட்சுமி, சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்த சன்னதிகளில் இருக்கின்றனர். 
*
வைகாசி விசாகம் , கார்த்திகை சோமவாரங்கள் , நவராத்திரி , கார்த்திகை தீபம் முதலான விழாக்கள் 
*
சிவனார் வாசுகி நாகத்தை தன் புஜத்தில் அணிந்து அருள் செய்த தலம் 
*
பிரம்மன் , இந்திரன் , துர்வாசர் , அஞ்சகேது , விப்ரவணிகன் முதலானோர் வழிபட்ட தலம் 
*
வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் முதலான திருவிழாக்களும் , பவுர்ணமிதோறும் மகாலட்சுமி பூஜையும் சிறப்புடன் நடைபெறும் தலம் 
*
பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கும் , திருமணத்தடை நீங்கவும் , ஜாதக ரீதியாக பாதிப்புள்ளவர்கள் , ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம் 

நித்திய பூஜைக்கும் வழியின்றி தவிக்கும் ஆலயங்களில் இவ்வாலயமும் ஒன்று . பக்தர்களின் பேராதரவு தேவை 

தரிசன நேரம் 

காலை 06:30 - 11:30 &
மாலை 04:30 - 08:00

தொடர்புக்கு 

04364 - 254879 ,
98425-38954

வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு தாண்டி அதே சாலையில் மேலும் சென்றால் வாளொளிப்புத்தூரை அடையலாம் . ஊரில் இடப்புறமாகச் செல்லும் சாலையின் கடைசியில் கோயில் உள்ளது. 
மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ., வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
காவிரி வடகரை தலங்கள் 

இருபத்தெட்டாவது தலம் 

திருக்குரக்குக்கா என்கிற திருக்குரக்காவல் 

மூலவர் - குந்தளேஸ்வரர் 






அம்பாள் - குந்தளாம்பிகை 

















தலமரம் - வில்வ மரம்

தீர்த்தம் - கணபதி நதி 


புராண பெயர் - திருக்குரக்காவல்
தற்போதைய பெயர் - திருக்குரக்கா
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர் 

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 28வது தலம்.

*
ராமலிங்கத்தை பெயர்த்தெடுக்க முயற்சித்ததால் உண்டான பாவமும், சாபமும் தீர அனுமன் வழிபட்டு அருள் பெற்ற தலம் 

*
அப்பரின் மூலத்திருமேனி தனியழகுடன் 
*
மூலவர் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி 
*
ஆஞ்சநேயர் சன்னதி, சிவன் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது.








*
இக் கோயிலில் தட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பியுள்ளார்








*
பஞ்ச காக்கள் எனப்படும் தலங்களில் ஒன்று 

*
கொடிமரம் இல்லை 
*
அமாவாசை நாளில் அம்மைக்கு ஓமம் நடைபெறும் தலம் 
*
சிவராத்திரி, திருக்கார்த்திகை, அனுமன் ஜெயந்தி முதலான திருவிழாக்கள் 
*
சிவனார் மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார். 













*
சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது அதிசயமாக சொல்லப்படுகிறது ( இது தற்போது நடைபெறுகிறதா எனத் தெரியவில்லை. கோயில் குருக்கள்களிடம் விசாரித்து தெரிந்து கொள்ளலாம் )
*
பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன்,

கோஷ்டத்தில் வனதுர்க்கை,

கிராம தேவதையான செல்லியம்மன் 


ஆகியோர் உள்ளனர். 
*
இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில், புகழ் பெற்ற நவக்கிரக தலமான (செவ்வாய் தலம்) வைத்தீஸ்வரன் கோயில் இருக்கிறது.
*
சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய அனுமன் இத்தலத்தில் சிவபூஜை செய்ததாகவும் ,. அப்போது சிவனுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது. ஆஞ்சநேயரால் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவனார் 'குண்டலகேஸ்வரர்' என்றும் அழைக்கபடுகிறார் 

குருக்கள் வீடு அருகிலேயே உள்ளது . தொடர்பு கொண்டு சென்றால் ஆலயத்தை மற்ற நேரங்களிலும் தரிசிக்கலாம் 

மேலும் தொடர்புக்கு 

www.facebook.com/nataraj.sivam.33

தரிசன நேரம் 

காலை 06:00 - 12:00 &
மாலை 04:00 - 08:00

தொடர்புக்கு 

04364-258785

வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு ஊரையடைந்து ஊரின் தொடக்கத்திலேயே உள்ள மருத்துவமனைக்கு பக்கத்தில் செல்லும் சாலையில் 3 கிமீ பயணித்தால் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து 13 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.