திங்கள், 29 ஜூன், 2015

காவிரி வடகரை தலங்கள் 

நான்காவது தலம் 

திருக்கழிப்பாலை 

மூலவர்                   -   பால்வண்ண நாதேஸ்வரர்
அம்பாள்                  -   வேதநாயகி அம்மை



தலமரம்                  -    வில்வ மரம் 
தீர்த்தம்                   -   கொள்ளிட நதி
புராண பெயர்             -   திருக்கழிப்பாலை, காரைமேடு
தற்போதைய பெயர்       -   திருக்கழிப்பாலை
மாவட்டம்                -   கடலூர்
மாநிலம்                  -   தமிழ்நாடு
பாடியவர்கள்              -  அப்பர், சம்பந்தர், சுந்தரர்

 
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 4வது தலம்.
 

பழைய கோயில் கொள்ளிட நதியால் சூழப்பட இங்கு தற்போதைய புதிய கோயில் நிர்மாணிக்கப்பட்டது
 

மூலவர் திருமேனி வெண்மை நிறத்துடன் மிகச்சிறிய பாணமாக மேற்புறம் நடுவில் சதுரமான சிறிய பள்ளத்துடன் காட்சி , குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்
 

பால் அபிஷேகம் மட்டுமே மூலவர் திருமேனிக்கு, மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே
 

மூலவரின் பின்புறம் சிவனாரும் அம்மையும் நின்ற திருக்கோலத்தில் காட்சி 
 


இங்குள்ள நடராஜரின் சடைமுடி அள்ளிமுடிந்த கோலத்தில் உள்ளது. அருகில் சிவகாமியம்மன், தன் தோழிகளான விஜயா, சரஸ்வதி இருவருடன் ஒரே பீடத்தில் காட்சியளிப்பது தனி சிறப்பாகும். 





 

உள்பிரகார நுழைவாயில் இருபுறமும் அதிகார நந்தியர் மனைவியருடன் காட்சி 



முயலகன் மாறிய நிலையில் தெட்சிணாமூர்த்தி

























 


வால்மீகி வழிபட்ட தலம்
 

 பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, அகோர மூர்த்தி,  கிராதமூர்த்தி, நாயன்மார்கள், சதுரா துர்க்கை, புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
 

 இத்தலம் முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னுமிடத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு கழிப்பாலை என்ற பெயர் இருந்தது. கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில் முழுவதும் சிதலமடைந்து விட்டது. எனவே தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டி, அதில் கழிப்பாலை இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

 லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது நம்பிக்கை.

எல்லா செயல்களிலும் வெற்றிகிடைக்க இங்குள்ள விஜய விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியில் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பானதாக சொல்லப்படுகிறது 

 இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞான அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது.
இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



 அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று 
 

தைப்பூசம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை முதலான திருவிழாக்கள் 

தரிசன நேரம்

காலை 06:00 - 11:00 &
மாலை 05:00 - 07:l5

தொடர்புக்கு 

04364-235462,
04144-237265 ,
98426 24580.

தொலைபேசியில் தொடர்பு கொண்டு பின் செல்வது நலம் 

சிதம்பரத்தில் இருந்து சுமார் 11 கிமீ தொலைவில் திருநெல்வாயில் அருகில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்

காவிரி வடகரை தலங்கள் 


மூன்றாவது தலம் 

திருநெல்வாயில் @ சிவபுரி

மூலவர்            - உச்சிநாதேஸ்வரர் என்ற மத்யானேஸ்வரர்

அம்பாள்            - கனகாம்பிகை

தலமரம்            - நெல்லி மரம் 
தீர்த்தம்             - கிருபா சமுத்திரம் 
புராண பெயர்       - திருநெல்வாயில்
தற்போதைய பெயர்  - சிவபுரி
மாவட்டம்          - கடலூர்
மாநிலம்            - தமிழ்நாடு
பாடியவர்கள்        - சம்பந்தர் 





 தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 3வது தலம்.
 

சிவனார் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி


 

இக்கோயிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப்பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.
 

மூலவரின் திருமேனி உயரமும் பருமனும் குறைந்த, சிறிய சதுரபீட அமைப்புடன் காட்சி 
 

சம்பந்தருக்கு உச்சி வேளையில் அமுது அளித்த இறைவர் 







 

கன்வ மகரிஷி வழிபட்ட தலம் 
 

மக்கள் இக்கோயிலை "கனகாம்பாள் கோயில்' என்று அழைக்கின்றனர்.
 

முருகப்பெருமான் ஒரு முகத்துடனும் , நான்கு திருக்கரங்களுடனும் திருக்காட்சி 

தரிசனம் நேரம் 

காலை 06:30 &
மாலை 04:30.

தொடர்புக்கு 

9842624580

சிதம்பரம் அண்ணாமலை நகர் சாலை வந்து பின் கவரப்பட்டு சாலையில் பேராம்பட்டு சாலைக்கு நேர் எதிர் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.

புதன், 24 ஜூன், 2015

காவிரி வடகரை தலங்கள் 


இரண்டாவது தலம் 

திருவேட்களம் 

மூலவர் - பாசுபதேஸ்வரர் 
அம்பாள் - சற்குணாம்பாள் (  நல்லநாயகி )
தலமரம் - மூங்கில் 
தீர்த்தம் - கிருபாகடாட்சம் 
புராண பெயர் - திருவேட்களம்
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்




 தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 2வது தலம்.
 
சிவனார் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கியருளிய தலம் 

சிவனார் கிராதமூர்த்தியாக பாசுபதாஸ்திரம் ஏந்தி அம்மையுடன் காட்சி 
 






நாரதர் வழிபட்ட தலம் 
 
நடராஜர் மகுடமணிந்து காட்சி 
 
அர்ஜுனனின் உற்சவ விக்ரகம்

தட்சிணாமூர்த்தி அனுக்கிரக தட்சிணாமூர்த்தியாக அருள்புரிகிறார் தட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலைவைத்துள்ளார்.
 

 சூரியனும் சந்திரனும் அருகருகே இருப்பதால் சூரிய, சந்திர கிரகணங்களின் போது இங்கு வழிபாடு செய்வது சிறப்பு
 அம்பிகையின் சன்னதியில் 4 தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்றவை சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.





 சித்திரை முதல் தேதி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, மகா சிவராத்தரி, பங்குனி உத்திரம் முதலான திருவிழாக்கள் 
 
சாஸ்திரப்படி கோயில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ, அதன்படி அமைக்கப்பட்ட கோயில்
 












பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இத்தல இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்ற வரலாறு சொல்லப்படுகிறது 
 
திருமணத்தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம் 


 
நல்லநாயகி அம்மை நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருள்புரிகிறார் . அம்மைக்கு எதிரிலும் நந்தி உள்ளது.
 
அர்ஜுனன் வில்லால் அடித்த வடுவின் தடத்தை இன்றும் சிவனாரின் திருமேனி லிங்கத்தின் மீது காணலாம்.

தரிசன நேரம் 

காலை 06:45 - 11:30 & 
மாலை 05:30 - 08:30

தொடர்புக்கு 

04144-238274 & 
9842008291 , 
98433 88552

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அருகில் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளேயே இத்தலம் அமைந்துள்ளது