காவிரி வடகரை தலங்கள்
நான்காவது தலம்
திருக்கழிப்பாலை
மூலவர் - பால்வண்ண நாதேஸ்வரர்
அம்பாள் - வேதநாயகி அம்மை
நான்காவது தலம்
திருக்கழிப்பாலை
மூலவர் - பால்வண்ண நாதேஸ்வரர்
அம்பாள் - வேதநாயகி அம்மை
தலமரம் - வில்வ மரம்
தீர்த்தம் - கொள்ளிட நதி
புராண பெயர் - திருக்கழிப்பாலை, காரைமேடு
தற்போதைய பெயர் - திருக்கழிப்பாலை
தீர்த்தம் - கொள்ளிட நதி
புராண பெயர் - திருக்கழிப்பாலை, காரைமேடு
தற்போதைய பெயர் - திருக்கழிப்பாலை
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர், சம்பந்தர், சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 4வது தலம்.
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர், சம்பந்தர், சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 4வது தலம்.
பழைய
கோயில் கொள்ளிட நதியால் சூழப்பட இங்கு தற்போதைய புதிய கோயில் நிர்மாணிக்கப்பட்டது
மூலவர்
திருமேனி வெண்மை நிறத்துடன் மிகச்சிறிய பாணமாக மேற்புறம் நடுவில் சதுரமான சிறிய
பள்ளத்துடன் காட்சி , குதிரையின்
கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை
நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்
பால்
அபிஷேகம் மட்டுமே மூலவர் திருமேனிக்கு, மற்ற
அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே
மூலவரின்
பின்புறம் சிவனாரும் அம்மையும் நின்ற திருக்கோலத்தில் காட்சி
இங்குள்ள
நடராஜரின் சடைமுடி அள்ளிமுடிந்த கோலத்தில் உள்ளது. அருகில் சிவகாமியம்மன், தன்
தோழிகளான விஜயா, சரஸ்வதி இருவருடன் ஒரே பீடத்தில் காட்சியளிப்பது தனி
சிறப்பாகும்.
உள்பிரகார
நுழைவாயில் இருபுறமும் அதிகார நந்தியர் மனைவியருடன் காட்சி
முயலகன் மாறிய நிலையில் தெட்சிணாமூர்த்தி
வால்மீகி
வழிபட்ட தலம்
பிரகாரத்தில்
விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, அகோர
மூர்த்தி, கிராதமூர்த்தி, நாயன்மார்கள், சதுரா
துர்க்கை, புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
இத்தலம்
முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னுமிடத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு
கழிப்பாலை என்ற பெயர் இருந்தது. கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில்
முழுவதும் சிதலமடைந்து விட்டது. எனவே தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டி, அதில்
கழிப்பாலை இறைவனையும், இறைவியையும்
பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
லிங்கத்திற்கு
அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம்
சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது நம்பிக்கை.
எல்லா
செயல்களிலும் வெற்றிகிடைக்க இங்குள்ள விஜய விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியில்
அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பானதாக சொல்லப்படுகிறது
இங்குள்ள
பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை
ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை
அரைஞான அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன்
தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும்
வடிவமைத்ததாக கூறப்படுகிறது.
இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அகத்தியருக்கு
காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று
தைப்பூசம், நவராத்திரி, கார்த்திகை
சோமவாரம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி
திருவாதிரை முதலான திருவிழாக்கள்
தரிசன நேரம்
காலை 06:00 - 11:00 &
மாலை 05:00 - 07:l5
தொடர்புக்கு
04364-235462,
04144-237265 ,
98426 24580.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பின் செல்வது நலம்
சிதம்பரத்தில் இருந்து சுமார் 11 கிமீ தொலைவில் திருநெல்வாயில் அருகில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்
தரிசன நேரம்
காலை 06:00 - 11:00 &
மாலை 05:00 - 07:l5
தொடர்புக்கு
04364-235462,
04144-237265 ,
98426 24580.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பின் செல்வது நலம்
சிதம்பரத்தில் இருந்து சுமார் 11 கிமீ தொலைவில் திருநெல்வாயில் அருகில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்