காவிரி வடகரை தலங்கள்
முதல் தலம்
கோயில் என்கின்ற சிதம்பரம்
முதல் தலம்
கோயில் என்கின்ற சிதம்பரம்
மூலவர் - திருமூலட்டநாதர் , நடராஜர்
அம்பாள் - உமையம்மை , சிவகாம
சுந்தரி
தலமரம் - தில்லை மரம்
தீர்த்தம் - சிவகங்கை, புலிமடு, வியாக்ரபாத, ஆனந்த, நாக, குய்ய, பிரம்ம, சிவப்பிரியை, பரமானந்த கூபம் & திருப்பாற்கடல் தீர்த்தங்கள்
புராண பெயர் - தில்லை
தற்போதைய பெயர் - சிதம்பரம் மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர் , சம்பந்தர் , சுந்தரர் , மாணிக்கவாசகர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது முதன்மையானது
பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர் . ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் திருமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பி , இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்ய, இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவனார் , தைமாத பூசத்தில் நாட்டிய தரிசனம் தந்ததாக வரலாறு.
சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளியின் கோயில் நடராஜர் கோயில் அருகில் உள்ளது. இத்தில்லை காளியை தரிசித்த பின்பே திருமூலநாதரையும் , நடராஜரையும் தரிசிக்க வேண்டும் என்ற மரபும் சொல்லப்படுகிறது
திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. அந்த வகையில் திருமூலநாதரையும் , நடராஜரையும் தரிசிக்க முக்தி தரும் தலம் இது
ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அம்மன் சன்னதியில் உள்ளது.
பிரம்மா நடத்திய யாகத்தில் தோன்றிய கோலத்தை ரத்னசபாபதி என்கின்றனர். இவரது சிலை நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 - 11 மணிக்குள் பூஜை நடக்கும். சிலையின் முன்புறமும், பின்புறமுமாக இந்த தீபாராதனையைச் செய்வர்.
ஆலயத்தின் உள்ளேயே திவ்யதேசம் உள்ள மற்றொரு தலம்
நடராஜர் சன்னதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் தரிசிக்கலாம். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள திருத்தலம் இது.
சிதம்பர ரகசியம்: சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அதுபோல் இறைவனை உணரத்தான் முடியும் என்பதே .
அர்த்தஜாம
பூஜை இத்தலத்தின் தனி சிறப்பு. அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து
தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம்.
இறைவனின்
விராட புருஷ வடிவத்தில் இருதயஸ்தான தலம்
மூவர்
பாடிய தேவார பதிகங்கள் கண்டெடுக்கப்பட்ட தலம்
சிதம்பரம்
நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன
சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத
சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு
சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர
சாஸ்தா.
திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய தலம்.
திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய தலம்.
இலங்கையை
சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசர், நடராஜர்
அருளால் பேசச் செய்த தலம்.
திருக்கோயிலில்
சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராசசபை
என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருத்தலும், சிவன்
விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி
அமைந்திருத்தலும் தனிச் சிறப்புகளாகும்.
சேக்கிழார்
பெரிய புராணம் அரங்கேற்றிய தலம்
மாணிக்கவாசகர்
முக்தி தலம்
சித்திரை
திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி
சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி
திருவாதிரை, மாசி சதுர்த்தசி என வருடத்திற்கு ஆறு காலங்களில் மட்டுமே
நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் தலம்
புகழ்பெற்ற பாண்டி நாயகம் முருகர் சந்நிதி உள்ள தலம்
புகழ்பெற்ற பாண்டி நாயகம் முருகர் சந்நிதி உள்ள தலம்
சிதம்பரம்
நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற
பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி
வழிபடுகின்றனர்.
தொடர்புக்கு
04144-227171
04144-230251
தரிசன நேரம்
காலை 6:00 - 12:00 &
மாலை 4:45 - 10:00.
அர்த்தஜாம பூஜை
10:00 - 10:30
இருப்பிடம்
கடலூரிலிருந்து 44 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
தொடர்புக்கு
04144-227171
04144-230251
தரிசன நேரம்
காலை 6:00 - 12:00 &
மாலை 4:45 - 10:00.
அர்த்தஜாம பூஜை
10:00 - 10:30
இருப்பிடம்
கடலூரிலிருந்து 44 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக