வெள்ளி, 3 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

பத்தாவது தலம் 

திருப்பல்லவனீச்சுரம் தற்போது காவிரிப்பூம்பட்டினம் @ பூம்புகார் 

மூலவர் - பல்லவனேஸ்வரர் 



அம்பாள் - செளந்தர்யநாயகி 


தலமரம் - மல்லிகை , புன்னை



தீர்த்தம் - ஜானவி , காவிரி , சங்கம தீர்த்தங்கள் 





புராண பெயர் - பல்லவனேஸ்வரம், 
காவிரிப்பூம்பட்டினம்
தற்போதைய பெயர் - பூம்புகார்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர்

 
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 10வது தலம்



 பல்லவ மன்னன் வழிபட்ட தலம் 
 

பட்டினத்தார் , இயற்பகை நாயனார் பிறந்த தலம்

சிலப்பதிகார காவியம் தொடங்கியது இத்திருத்தலத்தில் தான் 
 

கோபுர வாயில் இடப்பக்கம் அதிகார நந்தி சந்நிதி 

சுப்ரமண்யர் பெரிய திருமேனியுடன் 

ஒரே சந்நிதியில் பைரவர் , சனைச்சரர் , சந்திரன் 
 

பெரிய , பருத்த பாணத்துடன் கம்பீரமாக மூலவர் திருக்காட்சி 
 

உள்மண்டப வலப்புறம் தில்லையமைப்பில் சபாபதி சபை


 

இங்கு தலவிநாயகராக அனுக்கை விநாயகர் அருள்புரிகிறார். 



 

காலவ மகரிஷி இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார். 

பட்டினத்தார் தனிச்சன்னதியில் கை கூப்பிய நிலையில் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இவரது சன்னதி விமானத்தில் பட்டினத்தார், மனைவி, அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவனார் ஆகியோரது சிற்பங்களும் இருக்கிறது.

 

இங்கு சிவனாருக்கு பிரம்மோற்ஸவம் கிடையாது. பட்டினத்தாருக்காக விழா எடுக்கப்படுகிறது. இதை 'அடியார் உற்சவம்' என்கிறார்கள். 

கொடிமரம் கிடையாது. 

அறிவான குழந்தைகள் பிறக்கவும், பொருட்கள் மீதான ஆசை குறையவும் வழிபடவேண்டிய தலம் 

வைகாசி விசாகம் , ஆடி மாதத்தில் 12 நாட்கள் பட்டினத்தார் திருவிழா முதலான திருவிழாக்கள். பட்டினத்தார் விழாவின் 10ம் நாளில் பட்டினத்தாருக்கு, சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரியளவில் நடக்கும். 
 

மருதவாணராக பிறந்த சிவன், அவரை வளர்த்த சிவசர்மா சுசீலை தம்பதியர், பட்டினத்தார், அவரது மனைவி சிவகலை, பட்டினத்தாரின் தாய் ஞானகலாம்பிகை, பட்டினத்தாரின் சீடர் பத்ரகிரியார், நாயடியார் மற்றும் முருகனை மடியில் அமர்த்தியபடி குகாம்பிகை ஆகியோர் இங்கு உற்சவ மூர்த்திகளாக இருக்கின்றனர் 



இக்கோயிலுக்கு எதிரே வங்காளவிரிகுடா கடல் உள்ளது. சுவாமி, கடலை பார்த்தபடி காட்சி தருகிறார். 
 

இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும், சுவாமியை நோக்கி, மேற்கு பார்த்தபடி இருப்பது சிறப்பான அமைப்பு. 


 

பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் வாகனம் கிடையாது. 




 

கோஷ்டத்தில் இரண்டு துர்க்கை இருக்கின்றனர்.
ஒருவரின் காலுக்கு கீழே மகிஷன் இல்லை. 



 

சண்டிகேஸ்வரர் சன்னதியில் இரண்டு பேர் இருக்கின்றனர். 


 

இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி, வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும். காவிரி, கடலுக்குள் புகும் இடம் என்பதால் "காவிரிபுகும்பட்டினம்' என்றழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது "பூம்புகார்' என்றழைக்கப்படுகிறது.







தரிசன நேரம் 

காலை 07:00 - 12:00 &
மாலை 05:00 - 08:00

தொடர்புக்கு 

04364-260594 ,
94437 - 19193

திருவெண்காட்டில் இருந்து 4 கிமீ தொலைவிலும் சாயாவனத்திலிருந்து 1 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இச்சிவத்தலம். பூம்புகார் கண்ணகி வளைவை தாண்டியதும் கோயில். மயிலாடுதுறையில் இருந்து 24 கி.மீ. தொலைவிலும் , சீர்காழியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இந்த கடற்க்கரை சிவத்தலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக