காவிரி வடகரை தலங்கள்
இருபத்தாறாவது தலம்
திருக்குறுக்கை வீரட்டம் தற்போது கொருக்கை
மூலவர் - வீரட்டேஸ்வரர்
இருபத்தாறாவது தலம்
திருக்குறுக்கை வீரட்டம் தற்போது கொருக்கை
மூலவர் - வீரட்டேஸ்வரர்
அம்பாள் - ஞானாம்பிகை
தலமரம் - கடுக்காய் மரம்
தீர்த்தம் - சூல தீர்த்தம் , பசுபதி தீர்த்தம்
புராண பெயர் - திருக்குறுக்கை
தற்போதைய பெயர் - கொருக்கை
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 26வது தலம்.
* அட்ட வீரட்ட தலங்களில் ஏழாவது தலம்
* சிவனார் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கிய தலம்
* தீர்க்கபாகு முனிவர் ( குறுங்கை முனிவர் ) வழிபட்ட தலம்
* ராஜகோபுரத்தில் பைரவர் , தட்சிணாமூர்த்தி , சதாசிவர் சிற்பங்கள்
* ராஜகோபுரத்தில் பன்றி, யானை , நரசிம்மம் மற்றும் மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய மூர்த்தியின் வடிவம்
* சிவனார் மேற்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி
* காமதகனமூர்த்தி சந்நிதி , இவர் தட்சிணாமூர்த்தி வடிவமாகவும் கருதப்படுகிறார்
* மாசிமகத்தன்று காமதகன விழா
* கோயிலில் இருந்து 1 கிமீ தொலைவில் காமதகனம் நிகழ்ந்த இடம் விபூதிகுட்டை என்ற பெயரில்
* விபூதிகுட்டையில்
மண் வெண்மை நிறமாக
* விநாயகர் சதுர ஆவுடையாருடன் , குறுங்கை கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* நின்ற கோலத்தில் சோகஹரேஸ்வரர் சந்நிதி
* நடராஜர் சபை ஜம்பு விநோத சபை ( இதில் கொடுமையான விஷயம் இந்த நடராஜர் சிலை கடந்த 15 நாட்களுக்கு முன் களவாடப்பட்டுள்ளது. மீண்டும் இவர் ஆலயத்திற்கு திரும்ப சிவனாரைத் தவிர வேறு கதி யார் )
* காமதகனமூர்த்தி உள்ள சபை காமனங்க நாசினி சபை
* மூலவர் உயர்ந்த பாணமாக சதுர ஆவுடையாருடன் திருக்காட்சி
* மூலவர் பீடத்தின் முன்புறத்தில் பத்ம பாணம் பதிந்த அடையாளம்
* தீர்த்தவாகு முனிவர் என்ற முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம்.
* பெருமாளின் புத்திர சோகத்தை போக்கியதால் இத்தலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்படுகிறது.
* சிவனார் யோகம் செய்த தலம்
* லட்சுமிதேவியின் நடுக்கம் தீர்த்த தலம்
* காமதகனமூர்த்தி பக்கத்தில் பூரணி அம்மையும் , எதிரில் மன்மதன்-ரதி உற்சவ விக்ரகங்களும் காட்சி. காம தகன மூர்த்தி இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன், இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்
* வேலைவாய்ப்பு, தொழில்விருத்தி, உத்யோக உயர்வுக்கு வழிபட வேண்டிய தலம்
* திருக்குறுக்கை என்ற ஊரைச் சுற்றியுள்ள ஊர்கள் பெயர்கள் இத்தலத்து வரலாற்றோடு சம்பந்தப்பட்டவை.
- சிவபெருமானின் தவத்தை கலைக்க மன்மதன் அதற்காக தன் கையில் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் கங்கணம் புத்தூர்.
- பால் சாப்பிட்ட இடம் பாலாக்குடி.வில் எடுத்த இடம் வில்லினூர்.
- குறி பார்த்த இடம் காவளமேடு.
- தன்னோடு வந்தவர்களோடு ஐவநல்லூரில் கூடி பாணம் விட முயற்ச்சித்து , அந்த இடம் சரியாக இல்லை என மேட்டுக் கொற்கை என்ற இடத்துக்கு வந்து பின்பக்கமிருந்தும் இல்லாது முன்பக்கமிருந்தும் இல்லாது ஒரு ஓரமாக நின்று மன்மதன் கணை விட்டதாக வரலாறு
* மாசி மகம் - காமதகன விழா - 10 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு - வீதியுலா. மார்கழி மாதம் - திருவாதிரை உற்சவம்- சுவாமி புறப்பாடு- நவராத்திரி ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது. வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி , பொங்கல், தமிழ் , ஆங்கில புத்தாண்டு தினங்களின் போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
தரிசன நேரம்
காலை 07:00 - 12:00 &
மாலை 04:00 - 08:00
தொடர்புக்கு
04364 - 203678 ,
மயிலாடுதுறையில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது இந்த வீரட்டத்தலம்.
மயிலாடுதுறை - மணல்மேடு - கொண்டல் மார்க்கத்தில் 3 கி.மீ. தொலைவில் திருக்குறுக்கை உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக