வெள்ளி, 31 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள்

இருபத்தாறாவது தலம் 

திருக்குறுக்கை வீரட்டம் தற்போது கொருக்கை

மூலவர் - வீரட்டேஸ்வரர் 










அம்பாள் - ஞானாம்பிகை 




தலமரம் - கடுக்காய் மரம் 


தீர்த்தம் - சூல தீர்த்தம் , பசுபதி தீர்த்தம்



புராண பெயர் - திருக்குறுக்கை
தற்போதைய பெயர் - கொருக்கை
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர் 

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 26வது தலம்.
*
அட்ட வீரட்ட தலங்களில் ஏழாவது தலம் 
*
சிவனார் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கிய தலம் 








*
தீர்க்கபாகு முனிவர் ( குறுங்கை முனிவர் ) வழிபட்ட தலம் 
*
ராஜகோபுரத்தில் பைரவர் , தட்சிணாமூர்த்தி , சதாசிவர் சிற்பங்கள் 









*
ராஜகோபுரத்தில் பன்றி, யானை , நரசிம்மம் மற்றும் மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய மூர்த்தியின் வடிவம் 












*
சிவனார் மேற்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி 
*
காமதகனமூர்த்தி சந்நிதி , இவர் தட்சிணாமூர்த்தி வடிவமாகவும் கருதப்படுகிறார் 






*
மாசிமகத்தன்று காமதகன விழா 
*
கோயிலில் இருந்து 1 கிமீ தொலைவில் காமதகனம் நிகழ்ந்த இடம் விபூதிகுட்டை என்ற பெயரில் 
* விபூதிகுட்டையில் மண் வெண்மை நிறமாக 






*
விநாயகர் சதுர ஆவுடையாருடன் , குறுங்கை கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.




*
நின்ற கோலத்தில் சோகஹரேஸ்வரர் சந்நிதி 


*
நடராஜர் சபை ஜம்பு விநோத சபை ( இதில் கொடுமையான விஷயம் இந்த நடராஜர் சிலை கடந்த 15 நாட்களுக்கு முன் களவாடப்பட்டுள்ளது. மீண்டும் இவர் ஆலயத்திற்கு திரும்ப சிவனாரைத் தவிர வேறு கதி யார் ) 



*
காமதகனமூர்த்தி உள்ள சபை காமனங்க நாசினி சபை








*
மூலவர் உயர்ந்த பாணமாக சதுர ஆவுடையாருடன் திருக்காட்சி 
*
மூலவர் பீடத்தின் முன்புறத்தில் பத்ம பாணம் பதிந்த அடையாளம் 
*
தீர்த்தவாகு முனிவர் என்ற முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம்.



*
பெருமாளின் புத்திர சோகத்தை போக்கியதால் இத்தலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்படுகிறது.
*
சிவனார் யோகம் செய்த தலம் 












*
லட்சுமிதேவியின் நடுக்கம் தீர்த்த தலம் 
*
காமதகனமூர்த்தி பக்கத்தில் பூரணி அம்மையும் , எதிரில் மன்மதன்-ரதி உற்சவ விக்ரகங்களும் காட்சி. காம தகன மூர்த்தி இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன், இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்

*
வேலைவாய்ப்பு, தொழில்விருத்தி, உத்யோக உயர்வுக்கு வழிபட வேண்டிய தலம்





*
திருக்குறுக்கை என்ற ஊரைச் சுற்றியுள்ள ஊர்கள் பெயர்கள் இத்தலத்து வரலாற்றோடு சம்பந்தப்பட்டவை. 
-
சிவபெருமானின் தவத்தை கலைக்க மன்மதன் அதற்காக தன் கையில் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் கங்கணம் புத்தூர்.
-
பால் சாப்பிட்ட இடம் பாலாக்குடி.வில் எடுத்த இடம் வில்லினூர். 
-
குறி பார்த்த இடம் காவளமேடு. 
-
தன்னோடு வந்தவர்களோடு ஐவநல்லூரில் கூடி பாணம் விட முயற்ச்சித்து , அந்த இடம் சரியாக இல்லை என மேட்டுக் கொற்கை என்ற இடத்துக்கு வந்து பின்பக்கமிருந்தும் இல்லாது முன்பக்கமிருந்தும் இல்லாது ஒரு ஓரமாக நின்று மன்மதன் கணை விட்டதாக வரலாறு 
*
மாசி மகம் - காமதகன விழா - 10 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு - வீதியுலா. மார்கழி மாதம் - திருவாதிரை உற்சவம்- சுவாமி புறப்பாடு- நவராத்திரி ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது. வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி , பொங்கல், தமிழ் , ஆங்கில புத்தாண்டு தினங்களின் போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

தரிசன நேரம்

காலை 07:00 - 12:00 &
மாலை 04:00 - 08:00

தொடர்புக்கு

04364 - 203678 ,

மயிலாடுதுறையில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது இந்த வீரட்டத்தலம். 
மயிலாடுதுறை - மணல்மேடு - கொண்டல் மார்க்கத்தில் 3 கி.மீ. தொலைவில் திருக்குறுக்கை உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக