வியாழன், 2 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

ஒன்பதாவது தலம் 

திருச்சாய்க்காடு தற்போது சாயாவனம் 

மூலவர் - சாயாவனேஸ்வரர் 






அம்பாள் - குயிலினும் நன்மொழியம்மை 





தலமரம் - பைஞ்சாய் ( ஒரு வகை கோரை )
தீர்த்தம் - ஐராவதம், காவிரி, சங்க முக 
தீர்த்தங்கள்
புராண பெயர் - திருச்சாய்க்காடு, மேலையூர் தற்போதைய பெயர் - சாயாவனம்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர், சம்பந்தர்

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 9வது தலம்
* 
*
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் 



















*
காசிக்கு சமமான தலம் 
*
உபமன்யு, இந்திரன், ஐராவதம், இயற்பகை நாயனார் முதலியோர் வழிபட்டு அருள் பெற்ற தலம் 
*
பூம்புகார் ஊர்க்காவல் தெய்வமான சம்பாதியம்மன் கோயில் இவ்வாலய குளத்திற்கு தெற்கில் 
*
கொடி மரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார்.








*
மாடக் கோயிலாதலின் நந்தி உயரத்தில் உள்ளார். 
*
வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகைநாயனார் துணைவியாருடன் உள்ள சன்னதிகள் உள்ளன


*
அகநானூறில் குறிப்பிடப்பட்டுள்ள பழமை வாய்ந்த தலம்
* 63
நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் பிறந்து, முக்தியடைந்தது இத்தலத்தில் தான். இவரது மனைவியும் சிறந்த சிவ பக்தை. 



*
நால்வர் சந்நிதியில் மூவர் முதலிகள் மட்டுமே 
*
அடுத்து விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவக்கிரகங்கள் முதலிய சன்னதிகள் 
*
உயர்ந்த பீடத்தில் பைரவர் 





*
கடலில் கண்டெடுக்கப்பட்ட வில்லேந்திய வேலவர் சந்நிதி மிகச்சிறப்பு, முருகப்பெருமான் வில் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். இந்த முருகன் தன் வலது காலில் சிவனால் கொடுக்கப்பட்ட வீர கண்டரமணியை அணிந்திருக்கிறார். எதிரிகளை அழிக்க முருகனுக்கு சக்தி கொடுத்த வேல் எப்படியோ, அதே போல் சிவன் கொடுத்தது தான் இந்த வீர கண்டரமணி. இவரை வழிபட எதிரி பயம் நீங்கும் என்ற வரலாறு சொல்லப்படுகிறது 















*
குட்டையான பாணத்துடன் சதுர ஆவுடையாருடன் மூலவர் காட்சி 
*
கோயிலின் முன்மண்டப தென்புற இந்திரவிமானம் சக்கரம் குதிரைகளுடன் தேர் போன்று அமைந்துள்ளது 







*
இத்தல இறைவனை வழிபட்டு கிருஷ்ணர் - சாம்பன், சூரியன் - மனு, இந்திரன் - ஜயந்தன், பலராமர் - கலப்பைப்படை, வாலி - அங்கதன் பெற்ற தலம் 
*
சித்திரை பெளர்ணமி தொடங்கி 21 நாட்கள் இந்திரவிழா, ஆடி அமாவாசையில் அன்னமளித்தல், சித்திரை - வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் தண்ணீர் பந்தல், வைகாசியில் குமரகுருபரர் பூஜை , மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு 5 நாள் பூஜை, அதில் நான்காம் நாளிரவு இறைவன் காட்சி கொடுக்கும் விழா முதலான திருவிழாக்கள் நடைபெறுகின்றன
*
இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், அதற்காக அவள் பூமிக்கு வந்தபோது, தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டதாகவும், அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்ததாகவும் , கோயிலை இழுத்ததுமே பார்வதியம்மை குயில் போல இனிமையாக கூவியதாகவும் , எனவே தான் அம்மனுக்கு "குயிலினும் இனிமொழியம்மை' என்ற திருநாமம் ஏற்பட்டதாகவும், சிவனார் இந்திரனிடம் கோயிலை தேவலோகம் கொண்டு செல்லாமல் இங்கேயே வந்து வழிபடவேண்டும் என்று கூறியதாகவும் தலவரலாறு சொல்லப்படுகிறது 

தரிசன நேரம் 

காலை 07:00 - 12:00 &
மாலை 04:00 - 08:00

தொடர்புக்கு 

04364-260151 ,
9443107069

சீர்காழி - பூம்புகார் சாலையில் திருவெண்காட்டில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் 20 கி.மீ. சென்றால் சாயாவனம் தலத்தை அடையலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக