செவ்வாய், 14 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

இருபத்தொன்றாம் தலம் 

திருநீடூர் 

மூலவர் - அருள் சோம நாதேஸ்வரர் @ சோமநாதர்

அம்பாள் - ஆதித்ய அபயப்ரதாம்பிகை @ வேயுறுதோளியம்மை

தலமரம் - மகிழமரம் 
தீர்த்தம் - ஆனந்த தீர்த்தம் முதலான 9 தீர்த்தங்கள்
புராண பெயர் - திருநீடூர்
தற்போதைய பெயர் - நீடூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர் , சுந்தரர் 

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 21வது தலம்.
*
ஊழிக்காலத்தும் அழியாது நீடித்திருக்கும் தலம் 
*
இந்திரன் , சூரியன் , சந்திரன் , காளி மற்றும் நண்டு வழிபட்ட தலம் 






*
முனையடுவார் நாயனார் முக்தித்தலம் 
*
இந்திரன் காவிரி மணலால் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம் 
*
மூலவர் வெண்மை நிறமாக மேனியில் நண்டின் கால்சுவடு கொண்டு திருக்காட்சி , லிங்கத்தில் இந்திரனின் விரல் தடம் இருப்பதை இப்போதும் காணலாம்.
*
இந்திரனுக்கு அம்மை அருள் புரிந்த தலம் 
*
சிந்தாமணி கணபதி , செல்வ கணபதி , சிவாநந்த கணபதி என மூன்று கணபதிகள் 

*
நடராஜர் சபை சிறப்பானது 


*
உற்சவமூர்த்தங்கள் திருவழுந்தூர் பெருமாள் கோயிலில் 
*
அம்பாள் வேயுறு தோளியம்மையை சூரியன் வழிபட்டு அருள் பெற்றதாக வரலாறு. எனவே அம்மை 'ஆதித்ய அபயவராதம்பிகை' என்றும் அழைக்கப்படுகிறார். 
*
அம்பாள் சன்னதி முன்மண்டபத்தில் சனீஸ்வரர் கிழக்கு பார்த்தபடி தனியே இருக்கிறார். ஒரே இடத்தில் இருந்து அம்பாளையும், சனியையும் தரிசிக்கலாம்.
*
இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. 
*
கோயிலுக்கு வெளியே பத்ரகாளியம்மன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இத்தலத்தில் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.


*
இத்தலத்தில் விநாயகரே பெரியவர், பழையவர், புனிதமானவர் என்ற 3 நிலைகளில் இருக்கிறார். இந்த வடிவங்களை சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்றழைக்கின்றனர்.



*
பிரகாரத்தில் சிவலோகநாதர், கைலாசநாதர், காசிவிஸ்வநாதர், ஆனந்த தாண்டவமூர்த்தி, சிவானந்த விநாயகர், முருகன், சப்தகன்னியர் முதலானோரின் சன்னதிகள்












*
நடராஜர் சுதை வடிவில் தனியே இருக்கிறார். 
*
இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். 
*
மூலவருக்கு மேல் உள்ள விமானம் இருதளம் எனப்படுகிறது.




*
திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள், செய்த தவறுக்கு வருந்துபவர்கள் வழிபடவேண்டிய தலம் 
*
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய வழிபாடு 
*
பங்குனியில் 10 நாள் பிரம்மோத்சவம், சிவராத்திரி, திருவாதிரை முதலான திருவிழாக்கள்

தரிசன நேரம் 

காலை 06:30 - 11:30 &
மாலை 04:00 - 08:30

தொடர்புக்கு 

04364 - 250142 ,
04364 - 250 424, 
99436 - 68084.

மயிலாடுதுறையில் இருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம் . வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் பட்டவர்த்தி. அங்கிருந்து இடப்புறம் மயிலாடுதுறை சாலையில் பயணித்தால் நீடூர் . சாலையிலிருந்து சிறிது உள்ளடங்கியுள்ளது ஆலயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக