காவிரி வடகரை தலங்கள்
இருபத்தொன்றாம் தலம்
திருநீடூர்
மூலவர் - அருள் சோம நாதேஸ்வரர் @ சோமநாதர்
இருபத்தொன்றாம் தலம்
திருநீடூர்
மூலவர் - அருள் சோம நாதேஸ்வரர் @ சோமநாதர்
அம்பாள் - ஆதித்ய அபயப்ரதாம்பிகை @ வேயுறுதோளியம்மை
தலமரம் - மகிழமரம்
தீர்த்தம் - ஆனந்த தீர்த்தம் முதலான 9 தீர்த்தங்கள்
புராண பெயர் - திருநீடூர்
தற்போதைய பெயர் - நீடூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர் , சுந்தரர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 21வது தலம்.
* ஊழிக்காலத்தும் அழியாது நீடித்திருக்கும் தலம்
* இந்திரன் , சூரியன் , சந்திரன் , காளி மற்றும் நண்டு வழிபட்ட தலம்
புராண பெயர் - திருநீடூர்
தற்போதைய பெயர் - நீடூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர் , சுந்தரர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 21வது தலம்.
* ஊழிக்காலத்தும் அழியாது நீடித்திருக்கும் தலம்
* இந்திரன் , சூரியன் , சந்திரன் , காளி மற்றும் நண்டு வழிபட்ட தலம்
* முனையடுவார் நாயனார் முக்தித்தலம்
* இந்திரன் காவிரி மணலால் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம்
* மூலவர் வெண்மை நிறமாக மேனியில் நண்டின் கால்சுவடு கொண்டு திருக்காட்சி , லிங்கத்தில் இந்திரனின் விரல் தடம் இருப்பதை இப்போதும் காணலாம்.
* இந்திரனுக்கு அம்மை அருள் புரிந்த தலம்
* சிந்தாமணி கணபதி , செல்வ கணபதி , சிவாநந்த கணபதி என மூன்று கணபதிகள்
* நடராஜர் சபை சிறப்பானது
* உற்சவமூர்த்தங்கள் திருவழுந்தூர் பெருமாள் கோயிலில்
* அம்பாள் வேயுறு தோளியம்மையை சூரியன் வழிபட்டு அருள் பெற்றதாக வரலாறு. எனவே அம்மை 'ஆதித்ய அபயவராதம்பிகை' என்றும் அழைக்கப்படுகிறார்.
* அம்பாள் சன்னதி முன்மண்டபத்தில் சனீஸ்வரர் கிழக்கு பார்த்தபடி தனியே இருக்கிறார். ஒரே இடத்தில் இருந்து அம்பாளையும், சனியையும் தரிசிக்கலாம்.
* இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது.
* கோயிலுக்கு வெளியே பத்ரகாளியம்மன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இத்தலத்தில் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.
* இத்தலத்தில் விநாயகரே பெரியவர், பழையவர், புனிதமானவர் என்ற 3 நிலைகளில் இருக்கிறார். இந்த வடிவங்களை சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்றழைக்கின்றனர்.
* பிரகாரத்தில் சிவலோகநாதர், கைலாசநாதர், காசிவிஸ்வநாதர், ஆனந்த தாண்டவமூர்த்தி, சிவானந்த விநாயகர், முருகன், சப்தகன்னியர் முதலானோரின் சன்னதிகள்
* நடராஜர் சுதை வடிவில் தனியே இருக்கிறார்.
* இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
* மூலவருக்கு மேல் உள்ள விமானம் இருதளம் எனப்படுகிறது.
* திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள், செய்த தவறுக்கு வருந்துபவர்கள் வழிபடவேண்டிய தலம்
* ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய வழிபாடு
* பங்குனியில் 10 நாள் பிரம்மோத்சவம், சிவராத்திரி, திருவாதிரை முதலான திருவிழாக்கள்
தரிசன நேரம்
காலை 06:30 - 11:30 &
மாலை 04:00 - 08:30
தொடர்புக்கு
04364 - 250142 ,
04364 - 250 424,
99436 - 68084.
மயிலாடுதுறையில் இருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம் . வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் பட்டவர்த்தி. அங்கிருந்து இடப்புறம் மயிலாடுதுறை சாலையில் பயணித்தால் நீடூர் . சாலையிலிருந்து சிறிது உள்ளடங்கியுள்ளது ஆலயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக