வெள்ளி, 31 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

இருபத்தேழாவது தலம் 

திருக்கருப்பறியலூர் தற்போது தலைஞாயிறு என்கிற மேலைக்காழி 

மூலவர் - குற்றம் பொறுத்த நாதர் அபராதசமிக்ஷேஸ்வரர் )






அம்பாள் - கோல்வளை நாயகி விசித்ர வலையாம்பிகை )





தலமரம் - கொடி முல்லை 



தீர்த்தம் - இந்திர தீர்த்தம், சூரிய புஷ்கரிணி, பொற்றாமரை

புராண பெயர் - கருப்பறியலூர், கர்மநாசபுரம், மேலைக்காழி
தற்போதைய பெயர் - தலைஞாயிறு
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், சுந்தரர்

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 27வது தலம்.
*
இந்த ஆலயம் பழமையான கோயில் வகைகளில் ஒன்றான கொகுடி கோயில் அமைப்பிலானது









*
கருமூலத்தை அழித்து ஞானத்தை அளிக்கும் தலம் ( கருப்பறியலூர் ) 
*
சீர்காழிக்கு மேற்கில் அமைந்த அதே போன்ற தலம் ( மேலைக்காழி )
*
சூரியன் வழிபட்ட தலம் ( தலைஞாயிறு )
*
கட்டுமலை மேல் ஆலயம் 






*
இந்திரன் இறைவன் என்றறியாது வஜ்ராயுதம் எறிந்த குற்றத்தை பொறுத்து சிவனார் அவனுக்கு அருள் செய்த தலம்
*
தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். 


*
சீர்காழி சட்டை நாதர் கோயில் அமைப்பை போலவே இக்கோயிலும் தோணியப்பர் சந்நிதி , அதற்கு மேல் சட்டைநாதர் சந்நிதி என்ற அமைப்பிலான மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எனவே இத்தலத்தை "மேலைக்காழி' என்பர்.





*
தோணியப்பர் சந்நிதியில் கையில் மான் மழு கொண்டு அம்மையப்பர் மட்டுமே காட்சி அளிக்கின்றனர் 






*
தோணியப்பரான உமா மகேஸ்வரர் - அம்மையை கர்ப்ப ஞானேஸ்வரர் , கர்ப்ப ஞானேஸ்வரி என்று அழைக்கின்றனர் 

*
மூலவர் கிழக்கு நோக்கி திருக்காட்சி 
*
மகா மண்டப சுவரில் நாரை சிவனாரை வழிபடும் சிற்பம்
*
சண்டிகேஸ்வரர் மனைவியுடன் வீற்றிருக்கிறார். 

*
திருக்குரக்குக்கா தலம் அருகில் அமைந்துள்ளது 
*
விநாயகர் , சூரிய , வசிஷ்ட , அனுமன் , நிட்ப , சங்க , பொற்றாமரை , செங்கழுநீர்த் தடாகம் முதலான தீர்த்தங்கள் 
*
இந்திரன் , வசிஷ்டர் , ஆஞ்சநேயர் வழிபட்ட தலம் 
*
இத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்குப் பத்தாக பெருகும் என்பது வரலாறு 
*
திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடும் மற்றும் சிவனாருக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படும் தலம்.



*
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், குழந்தை பிறந்து, இறந்து விடும் தோஷம் உள்ளவர்களும், ஆண் , பெண் வாரிசு வேண்டுபவர்களும் வழிபடவேண்டிய தலம் 









* 72
மகரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்ற வரலாறும் சொல்லப்படுகிறது 

*
ராமேஸ்வரத்தில் அனுமனுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கிய தலம். பின்னர் அனுமன் இத்தலத்தின் வடகிழக்கில் தன்பெயரால் ஒரு லிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ததாகவும் , அத்தலம் தற்போது "திருக்குரக்கா' என அழைக்கப்படுவதாகவும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது 

தரிசன நேரம் 

காலை 07:00 - 12:00 &
மாலை 05:00 - 08:00

தொடர்புக்கு 

04364 - 203678 , 
04364 - 258833 ,
94431-90169

வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் வலப்புறமாகச் செல்லும் தலைஞாயிறு சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம் . வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 8 கிமீ தொலைவில் மணல்மேடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்

1 கருத்து:

  1. Betting on Online Casino in Karnataka | Kadangpintar
    Here we present our betting tips: febcasino You can also check out 온카지노 the online gambling sector in Karnataka in terms of the gambling market. Rating: 1.8 · ‎56 1xbet reviews

    பதிலளிநீக்கு