காவிரி வடகரை தலங்கள்
இருபத்தேழாவது தலம்
திருக்கருப்பறியலூர் தற்போது தலைஞாயிறு என்கிற மேலைக்காழி
மூலவர் - குற்றம் பொறுத்த நாதர் ( அபராதசமிக்ஷேஸ்வரர் )
இருபத்தேழாவது தலம்
திருக்கருப்பறியலூர் தற்போது தலைஞாயிறு என்கிற மேலைக்காழி
மூலவர் - குற்றம் பொறுத்த நாதர் ( அபராதசமிக்ஷேஸ்வரர் )
அம்பாள் - கோல்வளை நாயகி ( விசித்ர வலையாம்பிகை )
தலமரம் - கொடி முல்லை
தீர்த்தம் - இந்திர தீர்த்தம், சூரிய புஷ்கரிணி, பொற்றாமரை
புராண பெயர் - கருப்பறியலூர், கர்மநாசபுரம், மேலைக்காழி
தற்போதைய பெயர் - தலைஞாயிறு
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், சுந்தரர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 27வது தலம்.
* இந்த ஆலயம் பழமையான கோயில் வகைகளில் ஒன்றான கொகுடி கோயில் அமைப்பிலானது
தற்போதைய பெயர் - தலைஞாயிறு
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், சுந்தரர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 27வது தலம்.
* இந்த ஆலயம் பழமையான கோயில் வகைகளில் ஒன்றான கொகுடி கோயில் அமைப்பிலானது
* கருமூலத்தை அழித்து ஞானத்தை அளிக்கும் தலம் ( கருப்பறியலூர் )
* சீர்காழிக்கு மேற்கில் அமைந்த அதே போன்ற தலம் ( மேலைக்காழி )
* சூரியன் வழிபட்ட தலம் ( தலைஞாயிறு )
* கட்டுமலை மேல் ஆலயம்
* இந்திரன் இறைவன் என்றறியாது வஜ்ராயுதம் எறிந்த குற்றத்தை பொறுத்து சிவனார் அவனுக்கு அருள் செய்த தலம்
* தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
* சீர்காழி சட்டை நாதர் கோயில் அமைப்பை போலவே இக்கோயிலும் தோணியப்பர் சந்நிதி , அதற்கு மேல் சட்டைநாதர் சந்நிதி என்ற அமைப்பிலான மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எனவே இத்தலத்தை "மேலைக்காழி' என்பர்.
* தோணியப்பர் சந்நிதியில் கையில் மான் மழு கொண்டு அம்மையப்பர் மட்டுமே காட்சி அளிக்கின்றனர்
* தோணியப்பரான உமா மகேஸ்வரர் - அம்மையை கர்ப்ப ஞானேஸ்வரர் , கர்ப்ப ஞானேஸ்வரி என்று அழைக்கின்றனர்
* மூலவர் கிழக்கு நோக்கி திருக்காட்சி
* மகா மண்டப சுவரில் நாரை சிவனாரை வழிபடும் சிற்பம்
* சண்டிகேஸ்வரர் மனைவியுடன் வீற்றிருக்கிறார்.
* திருக்குரக்குக்கா தலம் அருகில் அமைந்துள்ளது
* விநாயகர் , சூரிய , வசிஷ்ட , அனுமன் , நிட்ப , சங்க , பொற்றாமரை , செங்கழுநீர்த் தடாகம் முதலான தீர்த்தங்கள்
* இந்திரன் , வசிஷ்டர் , ஆஞ்சநேயர் வழிபட்ட தலம்
* இத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்குப் பத்தாக பெருகும் என்பது வரலாறு
* திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடும் மற்றும் சிவனாருக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படும் தலம்.
* குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், குழந்தை பிறந்து, இறந்து விடும் தோஷம் உள்ளவர்களும், ஆண் , பெண் வாரிசு வேண்டுபவர்களும் வழிபடவேண்டிய தலம்
* 72 மகரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்ற வரலாறும் சொல்லப்படுகிறது
* ராமேஸ்வரத்தில் அனுமனுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கிய தலம். பின்னர் அனுமன் இத்தலத்தின் வடகிழக்கில் தன்பெயரால் ஒரு லிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ததாகவும் , அத்தலம் தற்போது "திருக்குரக்கா' என அழைக்கப்படுவதாகவும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது
தரிசன நேரம்
காலை 07:00 - 12:00 &
மாலை 05:00 - 08:00
தொடர்புக்கு
04364 - 203678 ,
04364 - 258833 ,
94431-90169
வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் வலப்புறமாகச் செல்லும் தலைஞாயிறு சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம் . வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 8 கிமீ தொலைவில் மணல்மேடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்
Betting on Online Casino in Karnataka | Kadangpintar
பதிலளிநீக்குHere we present our betting tips: febcasino You can also check out 온카지노 the online gambling sector in Karnataka in terms of the gambling market. Rating: 1.8 · 56 1xbet reviews