திங்கள், 6 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

பதிமூன்றாம் தலம் 

திருக்குருகாவூர் வெள்ளடை தற்போது திருக்கடாவூர் 

மூலவர் - வெள்ளடைநாதர் @ சுவேதரிஷபேஸ்வரர் 

அம்பாள் - காவியங்கண்ணி @ நீலோத்பல விசாலாட்சி 

தலமரம் - வில்வம்
தீர்த்தம் - பால் கிணறு 
புராண பெயர் - திருக்குருகாவூர் வெள்ளடை
தற்போதைய பெயர் - திருக்கடாவூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், சுந்தரர்

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 13வது தலம்
*
சிவனார் சுந்தரர்க்கு கட்டமுதும் நீரும் அளித்து பசி போக்கிய தலம் 



*
சுந்தரருக்கு பசி போக்கிய இடமான வரிசைப்பற்று @ இடமணல் சுமார் 2 கிமீ தொலைவில் தென் திருமுல்லைவாயில் சாலையில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்றும் உள்ளது 
*
தை அமாவாசையன்று ஆலயத்தின் வெளியே உள்ள பால் கிணற்றில் சுவாமி தீர்த்தவாரி. சம்பந்தருக்காக தைமாத அமாவாசையன்று கங்கை நதி பால்கிணற்றில் பொங்கியதாகவும் , இதன் அடிப்படையில் தற்போதும் தை அமாவாசையன்று ஒருநாள் மட்டும் இந்த தீர்த்தம் திறக்கப்பட்டு, அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது

*
சுந்தரருக்கு, சிவன் அன்னம் பரிமாறிய விழா கட்டமுது திருவிழாவாக சித்திரைப் பெளர்ணமியில் சிறப்புடன் நடைபெறுகிறது 
*
தைப்பூச நாளில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மிக விசேஷம் 



*
சிறிய பாணத்துடன் சதுர ஆவுடையாரில் மூலவர் திருக்காட்சி 
*
சிவலோக நாதர், பூலோகநாதர், பைரவர், சூரியன், சந்திரன், மாவடி விநாயகர் முதலானோரின் சந்நிதிகள் 







*
சிவனார் பரமாகாய வடிவினனாக விளங்கும் தலம்
*
இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சிவனார் சன்னதி கோஷ்டத்தில் உள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் இவருக்கு மேலே குடையும், இரண்டு சாமரங்களும் இருக்கிறது.










*
முருகர் , தெற்கு திசை நோக்கி வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.


*
கோஷ்டத்தில் சட்டைநாதர், துர்க்கையம்மன் திருக்காட்சி . இந்த துர்க்கையம்மன் , எட்டு கைகளுடன் காட்சி தருவது விசேஷம்.
*
நவக்கிரக சன்னதி கிடையாது.
*
தெரியாமல் செய்த பாவம் தீரவும் , அன்னத்திற்கு குறைவில்லாத நிலை ஏற்படவும் வழிபடவேண்டிய தலம் 







தரிசன நேரம் 

காலை 07:00 - 10:00 &
மாலை 06:00 - 08:00

தொடர்புக்கு 

92456-12705

சீர்காழி - தென்திருமுல்லைவாயில் சாலையில் வடகால் ( 6 கிமீ ). அங்கிருந்து குருகாவூர் 1 கிமீ . ஊர்க்கோடியில் கோயில் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக