காவிரி வடகரை தலங்கள்
பதிமூன்றாம் தலம்
திருக்குருகாவூர் வெள்ளடை தற்போது திருக்கடாவூர்
மூலவர் - வெள்ளடைநாதர் @ சுவேதரிஷபேஸ்வரர்
பதிமூன்றாம் தலம்
திருக்குருகாவூர் வெள்ளடை தற்போது திருக்கடாவூர்
மூலவர் - வெள்ளடைநாதர் @ சுவேதரிஷபேஸ்வரர்
அம்பாள் - காவியங்கண்ணி @ நீலோத்பல விசாலாட்சி
தலமரம் - வில்வம்
தீர்த்தம் - பால் கிணறு
புராண பெயர் - திருக்குருகாவூர்
வெள்ளடை
தற்போதைய பெயர் - திருக்கடாவூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், சுந்தரர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 13வது தலம்
* சிவனார் சுந்தரர்க்கு கட்டமுதும் நீரும் அளித்து பசி போக்கிய தலம்
தற்போதைய பெயர் - திருக்கடாவூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், சுந்தரர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 13வது தலம்
* சிவனார் சுந்தரர்க்கு கட்டமுதும் நீரும் அளித்து பசி போக்கிய தலம்
* சுந்தரருக்கு பசி போக்கிய இடமான வரிசைப்பற்று @ இடமணல் சுமார் 2 கிமீ தொலைவில் தென் திருமுல்லைவாயில் சாலையில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்றும் உள்ளது
* தை அமாவாசையன்று ஆலயத்தின் வெளியே உள்ள பால் கிணற்றில் சுவாமி தீர்த்தவாரி. சம்பந்தருக்காக தைமாத அமாவாசையன்று கங்கை நதி பால்கிணற்றில் பொங்கியதாகவும் , இதன் அடிப்படையில் தற்போதும் தை அமாவாசையன்று ஒருநாள் மட்டும் இந்த தீர்த்தம் திறக்கப்பட்டு, அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது
* சுந்தரருக்கு, சிவன் அன்னம் பரிமாறிய விழா கட்டமுது திருவிழாவாக சித்திரைப் பெளர்ணமியில் சிறப்புடன் நடைபெறுகிறது
* தைப்பூச நாளில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மிக விசேஷம்
* சிறிய பாணத்துடன் சதுர ஆவுடையாரில் மூலவர் திருக்காட்சி
* சிவலோக நாதர், பூலோகநாதர், பைரவர், சூரியன், சந்திரன், மாவடி விநாயகர் முதலானோரின் சந்நிதிகள்
* சிவனார் பரமாகாய வடிவினனாக விளங்கும் தலம்
* இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சிவனார் சன்னதி கோஷ்டத்தில் உள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் இவருக்கு மேலே குடையும், இரண்டு சாமரங்களும் இருக்கிறது.
* முருகர் , தெற்கு திசை நோக்கி வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
* கோஷ்டத்தில் சட்டைநாதர், துர்க்கையம்மன் திருக்காட்சி . இந்த துர்க்கையம்மன் , எட்டு கைகளுடன் காட்சி தருவது விசேஷம்.
* நவக்கிரக சன்னதி கிடையாது.
* தெரியாமல் செய்த பாவம் தீரவும் , அன்னத்திற்கு குறைவில்லாத நிலை ஏற்படவும் வழிபடவேண்டிய தலம்
தரிசன நேரம்
காலை 07:00 - 10:00 &
மாலை 06:00 - 08:00
தொடர்புக்கு
92456-12705
சீர்காழி - தென்திருமுல்லைவாயில் சாலையில் வடகால் ( 6 கிமீ ). அங்கிருந்து குருகாவூர் 1 கிமீ . ஊர்க்கோடியில் கோயில் அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக