ஞாயிறு, 12 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

பத்தொன்பதாவது தலம் 

திருநின்றியூர் 

மூலவர் - மகாலட்சுமீசர் , மகாலட்சுமிபுரீஸ்வரர்

அம்பாள் - லோகநாயகி 

தலமரம் - விளாமரம் , வில்வம்
தீர்த்தம் - லட்சுமி தீர்த்தம் , நீலப்பொய்கை




புராண பெயர் - திரிநின்றஊர், திருநின்றியூர்
தற்போதைய பெயர் - திருநின்றியூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், அப்பர் , சுந்தரர் 

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 19வது தலம். 
*
மகாலட்சுமி வழிபட்ட தலம் 
*
பராசரர் , அகத்தியர் வழிபட்ட தலம் 
*
மாடக்கோயில்களில் ஒன்றான தலம் 
*
தலவிநாயகராக செல்வப் பிள்ளையார் தனிச்சந்நிதியில் , அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கடன் தொல்லை உள்ளவர்கள் இவரை வழிபடவேண்டும் என்ற தகவல் கூறப்படுகிறது 

*
திரி அணைந்த தலம் என்பதால், "திரிநின்றியூர்' என்றும், மகாலட்சுமி வழிபட்டதால் "திருநின்றியூர்' என்றும் பெயர் பெற்றது.
*
நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. 
*
அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள் 
*
சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு இருக்கிறது. 
*
பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் 'பரசுராமலிங்க'மாக இருக்கிறார். அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் "ஜமதக்னீஸ்வரராக' சிறிய பாண வடிவிலும், பரிக்கேஸ்வரர் பெரிய பாண வடிவிலும் அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர். 


*
இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல, மூன்று குளங்கள் இருப்பது விசேஷம். 
*
கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது புறமாக திரும்பி கையில் நாகத்துடன் இருக்கிறான். சுவாமி, தன் இடது கையால் அவனுக்கு அருள் செய்யும் கோலத்தில் இருக்கிறார். 

*
சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் திருக்காட்சி 

*
உயர்ந்த பாணத்துடனும் உச்சியில் குழியுடனும் மூலவர் கம்பீரமாக திருக்காட்சி 
*
அம்பாள் சந்நிதி பேரழகுடன் 
*
மூலவர் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி 
*
சிவனாருக்கு மாதுளம்பழ முத்துக்களால் அபிஷேகம் செய்து வழிபடுவது இத்தலத்தில் விசேஷம்.
*
இந்திரன் , ஐராவதம் , காமதேனு வழிபட்ட தலம் 
*
ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள்
*
ஆனித்திருமஞ்சனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை.


*
தாயைக்கொன்ற தோஷம் நீங்குவதற்காக பரசுராமர் வழிபட்டு மன அமைதி பெற்ற தலம்
*
ஜமதக்னி முனிவர் தான் செய்த செயலுக்கு வருந்தி சிவனாரை வணங்கி அருள் பெற்ற தலம் .
*
மகாலட்சுமி சிவனாரை வழிபட்டு அருள் பெற்ற தலம். எனவே, இத்தலத்து சிவனார் 'மகாலட்சுமீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

தரிசன நேரம் 

காலை 07:00 - 11:00 &
மாலை 04:00 - 07:30

தொடர்புக்கு 

04364-320520 ,
94861 - 41430.

மயிலாடுதுறை - வைத்தீஸ்வரன் கோயில் - சீர்காழி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 7 கிமீ தொலைவிலுள்ளது இந்த சிவத்தலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக