வெள்ளி, 3 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள்

பதினொன்றாம் தலம்

திருவெண்காடு

மூலவர் - சுவேதாரண்யேஸ்வரர்


அம்பாள் - பிரம்ம வித்யாம்பிகை



தலமரம் - ஆலமரம் , கொன்றை , வில்வமரம்


தீர்த்தம் - அக்னி , சூரிய & சந்திர தீர்த்தங்கள்






புராண பெயர் - ஆதிசிதம்பரம், திருவெண்காடு
தற்போதைய பெயர் - திருவெண்காடு
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர், சம்பந்தர், சுந்தரர்,
மாணிக்க வாசகர்

* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11வது தலம்.
* ஆதி சிதம்பரம் எனப்படும் தலம்
* சக்திபீடங்களுள் ஒன்றான பிரணவ சக்திபீட தலம்
* சிவனாரின் 64 மூர்த்தங்களில் ஒன்றான அகோரமூர்த்தி வடிவம் உள்ள ஒரே தலம்



* . நவகிரகங்களில் புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். ஆகவே இத்தலம் நவக்கிரகங்களில் புதபகவானுக்கான தலமாக திகழ்கிறது






* மூன்று மூர்த்திகள் ( சுவேதாரண்யேஸ்வரர் , அகோரமூர்த்தி , நடராஜர் ) கொண்ட தலம்
* மூன்று தலமரங்கள் ( ஆல் , கொன்றை , வில்வம் ) உள்ள தலம்
* மூன்று அம்பிகைகள் ( பிரம்ம வித்யாம்பிகை , பத்ரகாளி , துர்க்கை ) கொண்ட தலம்
* காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு. இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று.
* சிவனார் நவ தாண்டவம் ஆடிய தலம்











* மூன்று தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபட எண்ணிய எண்ணம் ஈடேறும் என்பது சம்பந்தர் வாக்கு
* மெய்கண்டார் அவதரித்த தலம்
* அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக
* அம்பாள் ஆலய பிரகாரத்தில் நின்ற கோல பிள்ளையிடுக்கி அம்மன் ( சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை ) & சுக்ரவார அம்மன் சந்நிதிகள்
* முள் இல்லாத வில்வமரம்
* சந்திர தீர்த்தக்கரை வடஆலமரம் அடியில் ருத்ரபாதம்




* நடராஜர் சபை செப்பறையில், ஸ்படிகலிங்க வழிபாடு நாள்தோறும் , நடராஜ சபையும் ரகசியமும் உண்டு. நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு.




* அஷ்டபுஜ துர்க்கை மேற்கு நோக்கி


* சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். அகோரமூர்த்தி மூல & உற்சவ மூர்த்தங்கள் , நேர் எதிரே பத்ரகாளி சந்நிதி










* சுகாசனமூர்த்தி திருவடிவம்
* புதபகவான் சந்நிதி அம்பாள் ஆலய முகப்பில்



* சுவாமி சந்நிதி எதிரிலுள்ள நந்தியின் உடலில் 9 துளைகள்


* 63 நாயன்மார்களின் உற்சவ திருமேனிகள்
* சிலப்பதிகாரம் மற்றும் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலம்
* பிரம்ம வித்யாம்பிகை அம்மை மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை அம்மையானாள். கல்வியில் சிறந்து விளங்க அம்மையை வழிபாடு செய்வது சிறப்பு.
* அம்பாள் சந்நிதி பக்கத்தில் பிரம்மபீடம் என்ற பிரம்மசமாதி
* சிறிது உயர்ந்த பாணத்துடன் அழகிய திருமேனியாக மூலவர் திருக்காட்சி
* பட்டினத்தார் சிவதீட்சை பெற்ற தலம்
* சிவனாருக்கு காமிகாமத்தின் படியும் , அகோரமூர்த்திக்கு காரணாகமத்தின் படியும் , நடராஜருக்கு மகுடாமத்தின் படியும் பூஜைகள்
* இந்திரன் , ஐராவதம் , சிவப்பிரியர் , சுவேதகேது , திருமால் , பிரம்மா , சூரியன் , சந்திரன் , அக்னி முதலியோர் வழிபட்டு அருள் பெற்ற தலம்
* ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு மேல் அகோரமூர்த்திக்கு சிறப்பு வழிபாடுகள்
* தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.
* சோழர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ள தலம்
* உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சன்னதிகள் உள்ளன.
* பிரகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது. கரையில் சூரியதீர்த்தலிங்க சன்னதி உள்ளது.
* சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.
* சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சன்னதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சன்னதி தனிக் கோயிலாகவுள்ளது.










* இத்தல விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபாடு செய்வது சிறப்பு
* இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீக்க வல்ல தலம் . இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.
* பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். குழந்தைப் பேறு , திருமண வரம் கைகூட வழிபடவேண்டிய தலம் .
* நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமடையவும் , கல்வி மேன்மை, நா வன்மை பெறவும் , பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கவும் வழிபடவேண்டிய தலம் .
* நவக்க்ராகங்கள் ' ட ' வடிவில் அமைந்துள்ளன


* துயரம் நீங்கி மனஅமைதி பெறவும் , வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு முதலானவை பொருட்டும் வழிபடவேண்டிய தலம்
* மாசி மாதம் - இந்திரப் பெருவிழா - 13 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - இந்திரனால் நடத்தப்படும் விழா என்ற ஐதீகம் பெற்ற சிறப்புடையது இந்த திருவிழா




* சித்திரை திருவோணத்தில் நடராஜர் அபிசேகமும், வைகாசியில் வெள்ளை யானைக்கு சாப விமோசனம் அளித்தலும், ஆனி உத்திரத்தில் நடராஜருக்கு அபிசேகமும், ஆடியில் பட்டினத்தாருக்குச் சிவதீட்சை அளித்தலும், அம்பாளுக்கு ஆடிபூரம் பத்து நாள் உற்சவமும் , ஆவணியில் நடராஜருக்கு அபிசேகமும், கோகுலாஷ்டமி , விநாயகர் சதுர்த்தி விழாவும், புரட்டாசியில் தேவேந்திர பூஜையும், நவராத்தி விழாவும், ஐப்பசியில் கந்த சஷ்டி விழாவும், கார்த்திகையில் மூன்றாவது ஞாயிறு அன்று அகோர மூர்த்திக்கு மகாருத்ரா அபிசேகமும், கார்த்திகை தீப விழாவும், மார்கழி திருவாதிரையில் நடராஜர் தரிசனமும், தை மாதத்தில் சங்கராந்தி விழாவும் இத்தலத்தில் சிறப்புற நடைபெறுகின்றன. பங்குனி தோறும் அகோர மூர்த்திக்கு லட்சார்ச்சானை வைபவம் சிறப்புடன் நடைபெறும் தலம் .








* வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்

தரிசன நேரம்

காலை 06:00 - 12:00 &
மாலை 04:00 - 09:00

தொடர்புக்கு

04364-256424

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 15 கி.மீ தூரத்தில் திருவெண்காடு கோயில் உள்ளது. மாயவரம்-மங்கைமடம் சாலையில் சுமார் 10 கிமீ தொலைவில் இச்சிவத்தலம் அமைந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக