செவ்வாய், 14 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

இருபதாவது தலம் 

திருப்புன்கூர் 

மூலவர் - சிவலோகநாதர் 









அம்பாள் - சொக்கநாயகி ( சௌந்தரநாயகி  )





தலமரம் - புங்கமரம் 





தீர்த்தம் - இடபதீர்த்தம் என்கிற கணபதி தீர்த்தம் , தேவேந்திர தீர்த்தம்
நந்தனார் தீர்த்தம்



புராண பெயர் - திருப்புன்கூர்
தற்போதைய பெயர் - திருப்புன்கூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர் , அப்பர் , சுந்தரர்

* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 20வது தலம்.
* இத்தலத்தின் தல விருட்சம் புங்கமரம். எனவே தான் இந்த ஊருக்கு திருப்புன்கூர் என்ற பெயர் வந்தது. 
* மிகவும் பழமையான கோயில் இது. 
* இராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணிகள் நடந்துள்ள கோயில்.
* நந்தனார் வழிபடுவதற்காக சிவனார் நந்தியை சற்று விலகியிருக்குமாறு அருள் செய்த தலம் 












* கலிக்காமர் சுந்தரருடன் வந்து தரிசித்த தலம் 
* விறன்மிண்டர் வழிபட்ட தலம் 
* பிரம்மன் , இந்திரன் , அகத்தியர் , சந்திரன் , சூரியன் , அக்னி , பதஞ்சலி , வியாக்ரபாதர் , சப்தகன்னியர் , ராஜேந்திர சோழன் முதலானோர் வழிபட்ட தலம் 
* தீர்த்தம் விநாயகர் உதவியுடன் நந்தனார் சீரமைத்தது 
* நந்தனாரின் ஊரான ஆதனூர் இங்கிருந்து 5 கிமீ தொலைவில் 
* குளம் வெட்டிய விநாயகர் சந்நிதி , நந்தனாருக்காக இந்த பிள்ளையார் ஒரே இரவில் பூதங்களை கொண்டு குளம் வெட்டினார் என்பது வரலாறு.

* நந்தனார் கஞ்சி கலயம் மற்றும் மண்வெட்டியுடன் தனிசந்நிதியில் 




* பெரிய நந்தி 
* நால்வருடன் கலிக்காமரும் 

* சோமாஸ்கந்தர் பெரிய திருமேனியாக தனிச்சிறப்புடன் 
* நடராஜர் பாதத்தில் தேவர் ஒருவர் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்தியத்தை வாசிப்பது 


* நடராஜருக்கு தென்மேல் ஒரு உருவம் மணிமுழா முழக்குவது 

* கோஷ்ட மூர்த்தங்கள் கலையழகுடன் 

























* மூலவர் மண்புற்று வடிவில் சுயம்புவாக சற்று குட்டையான பாணத்துடன் எப்போதும் குவளை சார்த்தியே திருக்காட்சி 
* திங்கள்கிழமைகளில் அர்த்தஜாம பூஜையில் சிவனாருக்கு புனுகு சட்டம் சாற்றப்படுகிறது. அப்போது மட்டும் கவசமின்றி தரிசிக்கலாம் 
* நாக தோஷம், பூர்வ ஜென்ம பாவ தோஷம், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு
ஆகியவற்றுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டிய தலம் 
* இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு இருக்காது. துவார பாலகர்கள் இங்கு தலை சாய்த்து இருப்பர்.


* வைகாசி விசாகம் - 10 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - இத்தலத்தில் மிகச்சிறப்பாக நடக்கும் இந்த திருவிழாவில் பத்து நாட்களும் சுவாமி வீதியுலா வரும்.










* வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.











தரிசன நேரம் 

காலை 06:00 - 12:00 &
மாலை 04:00 - 08:30

தொடர்புக்கு 

04364-279784 ,
94867 - 17634

வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கிமீ பயணித்தால் ஆலயத்தின் வளைவை காணலாம் . அதனுள் நுழைந்து 1 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து 15 கி.மீ.தூரத்திலும், வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 3 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இந்த சிவத்தலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக