வெள்ளி, 24 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

இருபத்தைந்தாம் தலம் 

திருமணஞ்சேரி என்கிற கீழைத் திருமணஞ்சேரி 

மூலவர் - உத்வாகநாத சுவாமி 






அம்பாள் - கோகிலாம்பாள் 





தலமரம் - கருஊமத்தை
தீர்த்தம் - சப்தசாகர தீர்த்தம் 
புராண பெயர் - மணஞ்சேரி, 
கீழைத்திருமணஞ்சேரி
தற்போதைய பெயர் - திருமணஞ்சேரி
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர், சம்பந்தர்

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 25வது தலம்.
*
சிவனார் கல்யாணசுந்தரராக கோகிலாம்பாள் அம்மையை திருமணம் செய்து கொண்ட தலம் 
*
கோகிலாம்பாள் உடனான கல்யாணசுந்தரர் உற்சவ மூர்த்தம் பேரழகும், தனிச்சிறப்பும் வாய்ந்தது. சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்




































*
அம்மை மணக்கோலத்தில் சிறிய திருமேனி கொண்டு சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் திருக்காட்சி 






*
சிவனாரின் திருமணத்திற்கு மாலைகளாக வந்த சப்தசாகரமும் தீர்த்தமாக உள்ள தலம் 
*
மன்மதன் வழிபட்டு பேறு பெற்ற தலம் 
*
குலச்சிறை நாயனார் வழிபட்ட தலம் 
*
ஆமை வடிவ மணமகன் சிவனாரை வழிபட்டு மனித உரு மாறி தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்த தலம் 
*
இங்கு நவகிரகங்கள் கிடையாது. 
*
மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார். 
*
இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி,கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன.
*
காரண ஆகமப்படி வழிபாடுகள் 
*
கோஷ்ட மூர்த்தங்களாக பிட்சாடனர் , பாலகணபதி , நடராஜர் , தட்சிணாமூர்த்தி , லிங்கோத்பவர் , பிரம்மன் , மங்கள ராகு , துர்க்கை , கங்காவிசர்ஜனர் உள்ளனர் 






*
திருமணப் பிரார்த்தனைக்கான மிகச்சிறந்த தலம் 
*
திருமணத்தடை உள்ளவர்கள் கல்யாணசுந்தரர்ர்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து அம்மாலையை வீட்டிற்கு கொண்டு செல்வது வழக்கமான ஒன்றாக இங்கு தினந்தோறும் நடைபெறும் உற்சவம் 
*
திருமணநாட்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் ஏராளமான திருமணங்கள் நடைபெறும் தலம் 
*
புத்திரதோஷம் உள்ளவர்களுக்கு மங்களராகு வழிபாடு சிறப்பானதாக செய்யப்படும் தலம் 
*
ராகு கிரக தோச நிவர்த்திக்கும் இந்த தலம் சிறப்புடையது. ராகு பகவான் இங்கு முழு உருவில் உள்ளார். மனித உருவில் கவச குண்டலத்தோடு இருக்கிறார் என்பது விசேசம்




*
பிரிந்த தம்பதியர், மற்றும் அண்ணன் தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேசமான மற்றொரு அம்சம். வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம் 
*
காமன் சாபம் நீங்கப் பெற்ற தலம்







*
தலவரலாற்றுடன் தொடர்புடைய தலங்கள் 
-
பசுவாக பிறக்க அம்பாளுக்கு சாபம் ஏற்பட்ட தலம் தேரழுந்தூர் 
-
திருமால் மேய்ப்பராக வந்து பசுக்களை பாதுகாத்த தலம் கோமல் 
-
பசுகுளம்பின் வருடலை ஏற்ற தலம் திருக்கோழம்பம் 
-
பசுவுக்கு முக்தி கொடுக்கப்பட்ட தலம் திருவாவடுதுறை 
-
பரதமுனி நடத்திய யாகத்தீயில் உமையம்மை மகவாக தோன்றிய தலம் குத்தாலம் 
-
அம்மை கல்யாண நீராடலைக் கொண்டு கங்கணதாரணம் கொண்ட தலம் திருவேள்விக்குடி 
-
பாலிகை ஸ்தாபணம் செய்த தலம் குறுமுலைப்பாலை 
-
சிவனார் எதிர்கொண்டு அழைக்கப்பட்ட தலம் எதிர்கொள்பாடி 
-
உமையம்மையை சிவனார் மணந்து கொண்ட தலம் திருமணஞ்சேரி 
*
சித்திரை மாதம்- திருக்கல்யாண உற்சவம் -வருடந்தோறும் சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் ஈசன் திருக்கல்யாண மகோற்சவம் மூன்று தினங்கள் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆடிப்பூரம், திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகியன இத்தலத்தில் விசேசமாக நடைபெறும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

தரிசன நேரம் 

காலை 08:00 - 01:00 &
மாலை 03:30 - 08:30

தொடர்புக்கு 

04364-235002

குத்தாலத்தில் இருந்து பந்தநல்லூர் செல்லும் சாலையில் அஞ்சார் வார்த்தலை ஊரையடைந்து வலப்புறமாகச் செல்லும் சாலையில் பயணித்து எதிர்கொள்பாடி ஊரைக்கடந்து சிறிது தூரம் அதே சாலையில் சென்றால் திருமணஞ்சேரி தலத்தை அடையலாம். 
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியிலுள்ள குத்தாலம் சென்று அங்கிருந்து திருமணஞ்சேரி செல்லலாம். கும்பகோணத்திலிருந்து 29 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக