வெள்ளி, 24 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

இருபத்து நான்காவது தலம் 

எதிர்கொள்பாடி என்கிற மேலைத் திருமணஞ்சேரி

மூலவர் - ஐராவதேஸ்வரர் 




அம்பாள் - சுகந்த குந்தளாம்பிகை




தலமரம் -

தீர்த்தம் - ஐராவத தீர்த்தம்

புராண பெயர் - எதிர்கொள்பாடி,
மேலைத்திருமணஞ்சேரி
தற்போதய பெயர் - மேலத்திருமணஞ்சேரி
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சுந்தரர்

* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 24வது தலம்
* திருமணக் கோலத்தில் வந்த சிவனாரை பரத முனிவருடன் , தேவர்களும் மற்ற முனிவர்களும் எதிர்கொண்டு அழைத்துச் சென்ற தலம்

* வேள்விக்குடியில் திருமணம் செய்து கொண்ட அரசகுமாரனை சிவனார் அம்மானைப் போல எதிர்கொண்டு அழைத்துச் சென்ற தலம்
* கொடிமரம் இல்லை
* உள்பிராகாரத்தில் சரஸ்வதி தேவி ஞான சரஸ்வதியாக தனிச்ச்சன்னிதியில் திருக்காட்சி


* பொருளை பறி கொடுத்தவர்கள், பதவி பறி போனவர்கள், திருமணம் நடைபெறாமல் தோஷம் உள்ளவர்கள், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வது மிகவும் சிறப்பானதாக சொல்லப்படுகிறது.
* பழமையான ஆலயம்
* சிவனார் மேற்கு நோக்கி திருக்காட்சி



* ஐராவதம் வழிபட்டு பேறு பெற்ற தலம். ஐராவதம் யானை வழிபட்டதால் இங்குள்ள கர்ப்பக்கிரகம் யானை சுற்றும் அளவிற்கு மிகவும் பெரிதாக உள்ளது.
* சித்திரையில் இந்திர விழா, கார்த்திகை சோமவாரம், மார்கழியில் திருவாதிரை முதலான திருவிழாக்கள்














* திருமண வரவேற்பை இத்தலத்தில் நடத்தினால், தம்பதியர் நலம் பலபெற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.
* மணக்கோலத்தில் வந்த சிவ-பார்வதி தெய்வத் தம்பதியினரை பரதமுனிவர் எதிர்கொண்டு அழைத்தார். இதனால் இத்தலம் "எதிர்கொள்பாடி' என அழைக்கப்பட்டது. தற்போது "மேலக்கோயில்' என்று அழைக்கிறார்கள்.

தரிசன நேரம்

காலை 07:00 - 12:00 &
மாலை 04:00 - 08:00

தொடர்புக்கு

04364-235487 ,
04364-234223 ,
94429-02785

இந்த ஆலயத்தைப் பற்றி வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ளது. குத்தாலத்தில் இருந்து பந்தநல்லூர் செல்லும் சாலையில் அஞ்சார் வார்த்தலை ஊரையடைந்து வலப்புறம் திருமணஞ்சேரி செல்லும் சாலையில் சென்றால் முதலில் வரும் தலம் எதிர்கொள்பாடி தலமே. ஊருக்குள் நுழைந்ததும் வலப்புறமாகச் சென்றால் ஆலயத்தை அடையலாம் . மேலக்கோயில் என்று கேட்டால் மட்டுமே வழி சொல்லப்படுகிறது . இதே சாலையில் சிறிது தூரம் சென்றால் திருமணஞ்சேரி தலத்தை அடையலாம்.

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ளது குத்தாலம். இங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் திருமணஞ்சேரி செல்லும் வழியில் உள்ளது எதிர்கொள்பாடி சிவத்தலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக