வியாழன், 2 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

ஐந்தாவது தலம் 

திருநல்லூர் பெருமணம் தற்போது ஆச்சாள்புரம்
மூலவர் - சிவலோகத்தியாகேசர் 











அம்பாள் - திருவெண்ணீற்று உமையம்மை 










தலமரம் - மாமரம் 
தீர்த்தம் - பஞ்சாட்சரம் , பிருகு, அசுவ, வசிஷ்ட, 
அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு 
தீர்த்தங்கள்
புராண பெயர் - சிவலோகபுரம், நல்லூர்பெருமணம், 
திருமண நல்லூர் , திருமணவை
தற்போதைய பெயர் - ஆச்சாள்புரம்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 5வது தலம்.
 


சம்பந்தர் திருமணத் தலம் 

















 
சம்பந்தர் முக்தித்தலம். திருஞான சம்பந்தர் தனது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருடன் தானும் சிவ ஜோதியில் கலந்த தலம்












 
ஆச்சாள் ( அம்பிகை ) நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது. 
 

அம்மையின் சன்னதியில் திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசினால் நோய் விலகும், முன்ஜென்ம பாவம் விலகும், தரித்திரம் நீங்கும் , பெண்களுக்கு தாலி பாக்கியம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.
 

சம்பந்தர் மனைவியுடன் மூல மற்றும் உற்சவராக காட்சி 
 

உற்சவ மூர்த்தங்கள் 
 

சிற்ப எழில் வாய்ந்த தட்சிணாமூர்த்தி 







 
இக்கோயிலின் பிரகாரத்தில் ருணவிமோசன லிங்கேஸ்வரர் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு 



 
நடராஜர் சந்நிதி 




 
திருமால் வழிபட்டு அவுணர்களை வெல்லும் வரம் பெற்ற தலம்
 

வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர் ஆகியோர்களுக்கு இறைவன் கயிலை காட்சி காட்டி அருள்புரிந்து உள்ளார். 
 

பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். 



















இந்திரன் போகம் பெற்ற தலம் 
 

சந்திரன் அபயம் பெற்ற தலம் 

கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும். 
 

முருகப்பெருமானுக்கு சிவனார் சிவலோகத்தை அளித்த தலம் 
 

காகமுனிவர் தலையால் ( நடந்து ) வந்து வழிபட்ட தலம் 
 

வசிட்டர், பராசரர், பிருகு, ஜமதக்னி ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.
 

நீலகண்ட நாயனார் , முருக நாயனார் , நீலநக்க நாயனார் முக்தி அடைந்த தலம்
 

ராஜ கோபுரத்தை அடுத்து நந்தி மண்டபமும், அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளது. நூற்றுக்கால் மண்டபத்தில் சம்பந்தப்பெருமான், ஸ்தோத்திர பூராணாம்பிகையோடு மணக்கோலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்









 

கிழக்கே பார்த்தபடி சிவலோகதியாகராஜர் சன்னதியும், திருவெண்ணீற்று உமையம்மையின் சன்னதியும் அமைந்துள்ளது. 
 

இத்தல இறைவனை தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்க்கையில் தரித்திரம் நீங்கி , முக்தி கிடைப்பது நிச்சயம். இங்குள்ள ருணலிங்கேஸ்வரை வழிபட்டால் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
 

மகா சிவராத்திரி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது 

 "காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி 
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினு மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே''
எனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகம் தான் சம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசிப்பதிகமாகும். இத்தகு சிறப்புக்குரிய தலம் 

வைகாசி மூல நாளில் சம்பந்தர் திருமணம் மற்றும் முக்தி எய்தியது உற்சவமாக நடைபெறுகிறது 


தரிசன நேரம் 

காலை 06:00 - 12:00 &
மாலை 04:30 - 08:00

தொடர்புக்கு 

04364-278272 ( PP )

சீர்காழியிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த சிவத்தலம். சிதம்பரம் சீர்காழி சாலையில் கொள்ளிடம் ஊரையடைந்து இடப்புறமாக 8 கிமீ பயணித்தால் சாலையோரத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம். இந்த தலத்தை தாண்டி 3 கிமீ சென்றால் மற்றொரு பாடல் பெற்ற தலமான மயேந்திரப்பள்ளி தலத்தை தரிசிக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக