வியாழன், 2 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

எட்டாவது தலம் 

திருக்கலிகாமூர் தற்போது அன்னப்பன் பேட்டை 
                             மூலவர் - சுந்தரேஸ்வரர் 






அம்பாள் - சுந்தராம்பாள் (அழகம்மை)



தலமரம் - வில்வமரம் 
தீர்த்தம் - சந்திர தீர்த்தம் 
புராண பெயர் - கலிக்காமூர்
தற்போதைய பெயர் - அன்னப்பன்பேட்டை
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர்

 

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 8வது தலம்.
 

மூலவர் சிறிய பாணத்துடன் சதுர ஆவுடையாருடன் திருக்காட்சி 
 

அளவில் சிறிய கோயில் 
 

ராஜகோபுரம், கொடிமரம் கிடையாது. 



 

பிரகாரத்தில் சிவலிங்கத்தை வணங்கியபடி பராசர மகரிஷி காட்சி தருகிறார். 
 

கோஷ்டத்திலுள்ள துர்க்கையம்மன், எட்டு கரங்களுடன் காட்சி தருவது விசேஷம். 
 

பிரகாரத்தில் விஸ்வநாதர், அகிலாண்டேஸ்வரி அம்பாளுடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார்.




வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியருக்கு சன்னதி உள்ளது.
 

இத்தலவிநாயகர் செல்வசித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
 

அம்பாளுக்கு ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் , நவராத்திரியில் லட்சார்ச்சனை 
 

மாசிமகத்தன்று சுவாமி தென்திருமுல்லைவாயில் சென்று தீர்த்தவாரி 
 

செல்வப்பெருக்கு, செயல்தடை நீக்கம், செம்மையான புகழ், நல்ல ஆரோக்கியம் கிடைக்க வழிபட வேண்டிய தலம் என சம்பந்தர் பதிகம் 
 

வயிற்று வலி நோய் தீர்க்கும் தலம் 



\
இம்மையில் உடற்பிணியும், மறுமையில் பிறவிப்பிணியும் நீக்கும் தலம் 
 

பராசரர் வழிபட்ட தலம் 
 

கடலில் கண்டெடுக்கப்பட்ட நவராத்திரி அம்மன் விக்ரகம்
 
நோய்கள் நீங்க, முன்வினைப் பயன்களால் அனுபவிக்கும் பாவத்தின் பலன் குறைய வழிபடவேண்டிய தலம் , சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. ""இத்தலத்து ஈசனை வழிபட்டால் வினை, நோய் நீங்கி, செல்வம் பெருகும்,'' என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.
 

பிரகாரத்தில் வில்வவனநாதர் சன்னதியும் உள்ளது. "கலி' (துன்பம்) நீக்கும் சிவன் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், "திருக்கலிக்காமூர்' என்று அழைக்கப்படுகிறது. 
 

இங்குள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். இங்கு விநாயகர் சன்னதிக்கு முன்புறம் துவாரபாலர்கர் போல இரண்டு விநாயகர் இருக்கின்றனர். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.
 

இத்தலத்தில் மாசி மகத்தன்று நடக்கும் தீர்த்தவாரியின் போது அம்பாள் மட்டும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகிறாள்.
 

நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும் வாகனமின்றி நின்ற கோலத்தில் இருக்கின்றன
 

மாசி பவுர்ணமியில் தீர்த்தவாரி, சிவராத்திரி, நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம் முதலான திருவிழாக்கள் 
 

இங்கிருந்து 6 கி.மீ., தூரத்தில் நவக்கிரக தலங்களில் புதன் தலமான திருவெண்காடு தலம் இருக்கிறது.
 

பராசர முனிவர் சாப விமோசனத்திற்காக சிவனாரை வழிபட்ட தலம் . அவரது வேண்டுகோளுக்கு இணங்க சிவனார் இத்தலத்தில் எழுந்தருளியதாக தல வரலாறு சொல்லப்படுகிறது. பராசர மகரிஷிக்கு அழகு பொருந்தியவராக காட்சி தந்ததால் இவர், "சுந்தரேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். வில்வ வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் இவருக்கு "வில்வவன நாதர்' என்றும் பெயருண்டு.

தரிசன நேரம் 

காலை 08:00 - 10:00 &
மாலை 05:00 - 07:30

தொடர்புக்கு 

93605-77673, 
97879-29799

தென்திருமுல்லைவாயிலில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம் 

திருவெண்காடு - சீர்காழி சாலையில் மங்கைமடம் பின் திருநகரி செல்லும் சாலையில் சென்று கோனையாம்பட்டினம் சாலையில் சென்றால் அன்னப்பன் பேட்டை. ஊர் நடுவே சாலை பக்கத்தில் கோயில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக