திங்கள், 6 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

பன்னிரெண்டாம் தலம் 

கீழைத்திருக்காட்டுப்பள்ளி 

மூலவர் - ஆரண்ய சுந்தரேஸ்வரர் (ஆரண்யசுந்தரர்)

அம்பாள் - அகிலாண்டநாயகி 

தலமரம் - பன்னீர் மரம்

தீர்த்தம் - அமிர்த தீர்த்தம் 

புராண பெயர் - கீழைத்திருக்காட்டுப்பள்ளி
தற்போதைய பெயர் - திருக்காட்டுப்பள்ளி
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், அப்பர் 

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 12வது தலம்.
*
விருத்திராசுரனை கொன்ற பழி நீங்க இந்திரன் வழிபட்ட தலம் 
*
இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வனால் வழிபடப்பட்டவர் இவர். எனவே இவர் 'நண்டு விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு. பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூசிக வாகனமும் இங்கு கிடையாது. 

*
பிரம்மேச லிங்கத்தை வழிபட்டால் 100 அசுவமேத யாக பலன் 

*
முனியீசர் சந்நிதி 
*
கருவறை வெளிச்சுவரில் மன்னன் ஒருவன் இறைவனை வழிபடும் சிற்பம் 

*
மூலவர் சதுரபீட ஆவுடையாருடன் மேற்கு நோக்கி திருக்காட்சி , வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். "காட்டழகர்' என்றும் இவருக்கு பெயருண்டு. 
*
அம்பாள் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார். 
*
நவக்கிரக சன்னதி கிடையாது. 
*
சுவாமி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். இவர் 'ராஜயோக தட்சிணாமூர்த்தி' என்று அழைக்கப்படுகிறார்.

*
தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு மேற்கில் சுவரிலிருந்து கடலொலி போன்ற சப்தம் 
*
பிரகாரத்தில் 'தசலிங்கம்' சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு.


*
பைரவர், சூரியன், சனீஸ்வரர் முதலானோரின் சந்நிதிகள் உள்பிரகாரத்தில் 
*
சிவராத்திரி, கந்தசஷ்டி, ஆருத்ரா தரிசனம், விநாயகர் சதுர்த்தி முதலான திருவிழாக்கள்


*
மூலவரின் மேல் உள்ள விமானம் துவைதளம் எனப்படும் அமைப்பில்

*
ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம். அவரது பெயரால் சிவனார் ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுவதாவும் வரலாறு சொல்லப்படுகிறது . கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.

*
தெரியாமல் செய்த பாவம் நீங்க, இழந்த பதவி கிடைக்க வழிபடவேண்டிய தலம் 
*
இத்தலத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் நவக்கிரக புதன் தலமான திருவெண்காடு உள்ளது

தரிசன நேரம் 

காலை 08:00 - 11:00 &
மாலை 06:00 - 07:30

தொடர்புக்கு 

04364-256273 , 
94439 - 85770, 
98425 - 93244

மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ., சீர்காழியில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் இச்சிவத்தலம் அமைந்துள்ளது. திருவெண்காடு வரை சென்று, அங்கிருந்து அருகிலுள்ள இத்தலத்தை அடையலாம். திருவெண்காட்டில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் இளையமுதுகுலபுரம் செல்லும் சாலையில் இச்சிவத்தலம் அமைந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக