வியாழன், 2 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

ஆறாவது தலம் 

திருமயேந்திரப்பபள்ளி தற்போது மகேந்திரப்பள்ளி @ கோவிலடிப்பாளையம்

மூலவர் - திருமேனியழகர் 





அம்பாள் - வடிவாம்பிகை அம்மை





தலமரம் - கண்ட மரம் மற்றும் தாழை
தீர்த்தம் - மயேந்திர தீர்த்தம்
புராண பெயர் - திருமகேந்திரப் பள்ளி
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர் 
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 6வது தலம்.
 

சூரியன் , சந்திரன் , பிரம்மன் , இந்திரன் முதலியோர் வழிபட்டு அருள் பெற்ற தலம் 
 

சிவன், அம்பாள் இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி, "திருமேனி யழகர்' என்றும், அம்பாள் வடிவாம்பிகை' என்றும் அழைக்கப்படுகின்றனர். 
 

சிவனார் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி 

சிவனாரின் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.
 





விலங்குகள் , நீர் வாழ்வன , ஊர்வன , பறப்பன முதலானவைகளும் வழிபட்டு அருள் பெற்றதாக தலபுராணம் சொல்கிறது
 

பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், மனைவியுடன் இருக்கிறார். 



விநாயகருக்கு தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர்.




*
விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகள். 





*
நவக்கிரக சன்னதி இல்லை.
*
முன்வினைப்பயனால் சிரமப்படுபவர்களும், ஜாதகத்தில் சூரிய, சந்திர தசை நடப்பவர்களும் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் நல்விதி ஏற்படும் என்பது நம்பிக்கை.
*
கல்வியில் சிறக்கவும், நாகதோஷம் நீங்கவும் இத்தல விநாயகரை வழிபாடு செய்கிறார்கள் 
*
இந்திரன் சாப விமோசனத்திற்காக லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனாரை வழிபட்ட தலங்களில் ஒன்று மகேந்திரப்பள்ளியாகும்.(மகேந்திரன்) இந்திரன் வழிபட்டதால், "மகேந்திரப்பள்ளி' என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. 
















*
சம்பந்தர் உற்சவர்
*
பங்குனித்திங்களில் ஒரு வாரம் சூரிய வழிபாடு 
*
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குஉத்திரம், திருக்கார்த்திகை முதலான திருவிழாக்கள் 

தரிசன நேரம் 

காலை 09:00 - 12:00 &
மாலை 06:00 - 07:30.

தொடர்புக்கு 

04364-292309

இருப்பிடம் 

சீர்காழியிலிருந்து 19 கிமீ தொலைவிலும் , ஆச்சாள்புரத்தில் இருந்து 6 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இப்பாடல் பெற்ற சிவத்தலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக