காவிரி வடகரை தலங்கள்
ஆறாவது தலம்
திருமயேந்திரப்பபள்ளி தற்போது மகேந்திரப்பள்ளி @ கோவிலடிப்பாளையம்
மூலவர் - திருமேனியழகர்
ஆறாவது தலம்
திருமயேந்திரப்பபள்ளி தற்போது மகேந்திரப்பள்ளி @ கோவிலடிப்பாளையம்
மூலவர் - திருமேனியழகர்
அம்பாள் - வடிவாம்பிகை அம்மை
தலமரம் - கண்ட மரம் மற்றும் தாழை
தீர்த்தம் - மயேந்திர தீர்த்தம்
புராண பெயர் - திருமகேந்திரப் பள்ளி
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 6வது தலம்.
சூரியன்
, சந்திரன் , பிரம்மன்
, இந்திரன் முதலியோர் வழிபட்டு அருள் பெற்ற தலம்
சிவன், அம்பாள்
இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி, "திருமேனி யழகர்' என்றும், அம்பாள்
வடிவாம்பிகை' என்றும் அழைக்கப்படுகின்றனர்.
சிவனார்
கிழக்கு நோக்கியும் , அம்பாள்
தெற்கு நோக்கியும் திருக்காட்சி
சிவனாரின்
சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.
விலங்குகள்
, நீர் வாழ்வன , ஊர்வன
, பறப்பன முதலானவைகளும் வழிபட்டு அருள் பெற்றதாக தலபுராணம்
சொல்கிறது
பிரகாரத்தில்
சண்டிகேஸ்வரர், மனைவியுடன் இருக்கிறார்.
விநாயகருக்கு
தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது
இருவரும் உள்ளனர்.
* விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகள்.
* நவக்கிரக சன்னதி இல்லை.
* முன்வினைப்பயனால் சிரமப்படுபவர்களும், ஜாதகத்தில் சூரிய, சந்திர தசை நடப்பவர்களும் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் நல்விதி ஏற்படும் என்பது நம்பிக்கை.
* கல்வியில் சிறக்கவும், நாகதோஷம் நீங்கவும் இத்தல விநாயகரை வழிபாடு செய்கிறார்கள்
* இந்திரன் சாப விமோசனத்திற்காக லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனாரை வழிபட்ட தலங்களில் ஒன்று மகேந்திரப்பள்ளியாகும்.(மகேந்திரன்) இந்திரன் வழிபட்டதால், "மகேந்திரப்பள்ளி' என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது.
* சம்பந்தர் உற்சவர்
* பங்குனித்திங்களில் ஒரு வாரம் சூரிய வழிபாடு
* மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குஉத்திரம், திருக்கார்த்திகை முதலான திருவிழாக்கள்
தரிசன நேரம்
காலை 09:00 - 12:00 &
மாலை 06:00 - 07:30.
தொடர்புக்கு
04364-292309
இருப்பிடம்
சீர்காழியிலிருந்து 19 கிமீ தொலைவிலும் , ஆச்சாள்புரத்தில் இருந்து 6 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இப்பாடல் பெற்ற சிவத்தலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக