வெள்ளி, 10 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

பதினாறாவது தலம் 

புள்ளிருக்குவேளூர் தற்போது வைத்தீஸ்வரன் கோயில் 

மூலவர் - வைத்தியநாதர்






அம்பாள் - தையல்நாயகி






தலமரம் - வேம்பு

தீர்த்தம் - சித்தாமிர்தம்
புராண பெயர் - புள்ளிருக்குவேளூர்
தற்போதைய பெயர் - வைத்தீஸ்வரன் கோயில்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர் , சம்பந்தர் 

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 16வது தலம்.
*
புள் ( ஜடாயு ) , இருக்கு ( வேதம் ) , வேள் ( முருகர் ) , ஊர் ( சூரியன் ) வழிபட்ட தலம் 
*
உமையம்மை தையல்நாயகியாய் தைல பாத்திரமும், சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் கொண்டு உடன்வர சிவனார் மந்திரமும் மருந்துமாய் இருந்து உயிர்களின் வினைகளை போக்கியருளும் தலம் 

*
கோயிலின் கிழக்கே பைரவர், மேற்கே வீரபத்திரர், தெற்கே விநாயகர், வடக்கே காளி ஆகியோர் இத்தலத்திற்கு காவல் புரிகின்றனர். 
* 5
பிரகாரங்களைக் கொண்ட இந்தக் கோயில் மேற்கு திசை நோக்கியது.
*
செல்வமுத்துக்குமாரர் சிறப்புடன் அருள் புரியும் தலம் 


*
நவக்கிரகங்களில் செவ்வாய் ( அங்காரகன் ) தலம் 







*
கிருத்திகை தோறும் முத்துக்குமாரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் 



























*
கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில், வேம்படியில் ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கிறார்.
*
சிவனார் வைத்தியநாதர் மேற்கு நோக்கியும் , அம்பாள் தையல் நாயகி தெற்கு நோக்கியும் திருக்காட்சி. 
*
முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம். 
*
இராமர் வழிபட்டு அருள் நலமுற்ற தலம்.
*
இவ்வாலய பிரசாதமான சந்தனக்குழம்புருண்டை உட்கொண்டு சித்தாமிர்த குள நீரை பருகினால் சகல வியாதிகளும் நீங்கும் என்பது ஐதீகம்







*
இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும் என்பது நம்பிக்கை. 
*
ஆடிப்பூர அம்மன் சந்நிதி 
*
தன்வந்திரி சந்நிதி 

*
பத்ரகாளி சந்நிதி 
*
இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. 
*
இத்தலத்தில் சம்பாதி , ஜடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். ஜடாயுவின் வேண்டுகோளின்படி இராமபிரான் இத்தலத்தில் (விபூதி குண்டத்தில்) சிதையடுக்கிச் ஜடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் ஜடாயு குண்டம் எனப்பட்டது. 

*
இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது. 
*
மூலவருக்கு முன் தங்கம், வெள்ளியால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளன.
*
இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் , மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது.

*
அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
*
இக்கோயில் சோழர்களால் திருப்பணி செய்யப்பட்டது . 
*
வினைதீர்த்தான் கோயில் என்றழைக்கப்படும் இவ்வாலய விளக்கழகு 
*
செல்வமுத்துக்குமாரர்க்கு தை மாதத்தில் திருவிழா 
*
முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான். தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முத்துக்குமாரருக்கு பூஜை , பிறகே சுவாமி , அம்பாளுக்கு 
*
மகாலட்சுமி சன்னதி உள்ளது







*
அங்காரகன் , பிரம்மன் , ராமர் , சரஸ்வதி , லட்சுமி , துர்க்கை , பராசரர் , துர்வாசர் , சிவசன்மன் முதலானோர் வழிபட்டு அருள் பெற்ற தலம் 
*
தையல் நாயகி அம்மனை வணங்கினால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலதோஷம் நீங்கும்.
*
பிறக்கவும் , இறக்கவும் , வசிக்கவும் முக்தி தரும் தலம்
*
தைமாதம் - தை செவ்வாய் - 10 நாட்கள் திருவிழா - செல்வமுத்துக்குமரர் சுவாமிக்கு இந்த திருவிழா சிறப்பாக நடைபெறும் - பத்து நாட்களும் தினமும் சுவாமி வீதியுலா பங்குனி - பிரம்மோற்சவம் - 28 நாட்கள் - பஞ்சமூர்த்தியும் அபிசேக ஆராதனைகளோடு சுவாமி புறப்பாடு. ஐப்பசி - கந்த சஷ்டி - 6 நாள் விழா வைகாசி - மண்ணாபிசேக, மண்டலாபிசேக கிருத்திகை உள்ளிட்ட மாதாந்திர கிருத்திகைகளும் இத்தலத்தில் சிறப்பாக இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
*
வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு "திருச்சாந்து' எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. தோல் நோய்களுக்கு, இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர். 
*
முக்கியமான ஐந்து சந்நிதிகள் 
1.
கற்பக விநாயகர். 
2.
வைத்தியநாதசுவாமி
3.
தையல் நாயகி 
4.
செல்வமுத்துக்குமாரர் 
5.
அங்காரகன் 

தரிசன நேரம் 

காலை 05:30 - 01:00 &
மாலை 04:00 - 09:00

தொடர்புக்கு 

04364-279423 , 
04364-276198 pp
98435-44292 pp

சீர்காழியிலிருந்து சுமார் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 18 கிமீ தொலைவில் வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக