காவிரி வடகரை தலங்கள்
இருபத்திரண்டாம் தலம்
திருஅன்னியூர் தற்போது பொன்னூர்
மூலவர் - ஆபத்சகாயேஸ்வரர்
இருபத்திரண்டாம் தலம்
திருஅன்னியூர் தற்போது பொன்னூர்
மூலவர் - ஆபத்சகாயேஸ்வரர்
அம்பாள் - பெரிய நாயகி
தலமரம் - எலுமிச்சை மரம்
தீர்த்தம் - வருண என்கிற அக்னி தீர்த்தம்
புராண பெயர் - திருஅன்னியூர்
தற்போதைய பெயர் - பொன்னூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர் , சம்பந்தர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 22வது தலம்.
* அக்னி வழிபட்ட தலம்
* சூரியன் , ரதி , பாண்டவர்கள் வழிபட்ட தலம்
* இத்தலத்தைச் சுற்றி நீடூர் , மயிலாடுதுறை , வேள்விக்குடி , எதிர்கொள்பாடி , திருமணஞ்சேரி , திருக்குறுக்கை முதலான பாடல் பெற்ற தலங்கள் உள்ளன
* வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம்.
* சிவனார் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி
* அக்னிக்கு காட்சி தந்த ஆதி மூலலிங்கம் பிரகாரத்தில் தனிசந்நிதியில்
* அருகருகே இரண்டு தட்சிணாமூர்த்தி சன்னதிகள் இருக்கின்றன. இதில் மேதா தட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் இருக்கிறது.
* சந்திரசேகரர் , துர்க்கை , ஆடிப்பூர அம்மன் , அஸ்திரதேவர் முதலான மூர்த்தங்கள்
* மிகப்பழமையான சிவத்தலம்
* வருணன், அரிச்சந்திரன் வழிபட்டு அருள் பெற்ற தலம்
* நடராஜர் அபிஷேகங்கள் , நவராத்திரி , ஐப்பசி அன்னாபிஷேகம் , கார்த்திகை , தீபாவளி , தனுர்மாத வழிபாடுகள் , சங்கராந்தி , மகாசிவராத்திரி , வைகாசிவிசாகம் முதலிய சிறப்பு விழாக்கள்
* பங்குனித்திங்கள் ( 24 - 28 ) ஐந்து நாட்கள் சூரிய வழிபாடு
* கரிய மாணிக்கப் பெருமாள் கோயில்
* ஆதிசங்கரர் சன்னதி உள்ளது.
* முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி பூஜை செய்பவர்கள் , பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க, மனக்குறைகள் நீங்க வழிபடவேண்டிய தலம்
* கார்த்திகை மாதத்தில் சுவாமியை, ரதி வழிபட்ட வைபவமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது
தரிசன நேரம்
காலை 07:00 - 11:00 &
மாலை 05:00 - 07:30
தொடர்புக்கு
04364-250758 ,
04364-250755
மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 8 கிமீ தொலைவிலுள்ளது இச்சிவத்தலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக