காவிரி வடகரை தலங்கள்
இருபத்து மூன்றாம் தலம்
திருவேள்விக்குடி
மூலவர் - மணவாளேஸ்வரர்
இருபத்து மூன்றாம் தலம்
திருவேள்விக்குடி
மூலவர் - மணவாளேஸ்வரர்
அம்பாள் - பரிமளசுகந்த நாயகி
தலமரம் -
தீர்த்தம் - கெளதுகாபந்தன தீர்த்தம் ,
மங்கள தீர்த்தம்
புராண பெயர் - திருவேள்விக்குடி
தற்போதைய பெயர் - திருவேள்விக்குடி
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், சுந்தரர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 23வது தலம்.
* சிவனாரின் திருமண வேள்வி நடந்த தலம்
* அம்மைக்கு கங்கண தாரணம் செய்த தலம் ( கெளதுகாபந்தன ஷேத்திரம் )
* திருமணத் தடை நீக்கவல்ல அற்புதமான தலம்
* குத்தாலம் , திருவேள்விக்குடி , திருமணஞ்சேரி தலங்களை ஒரே நாளில் வழிபட திருமணத்தடை விலகும்
* சிவனாரின் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் சிவனாரே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார்.
* நவக்கிரகதோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம். பவுர்ணமி தினத்தில் காலை 10 முதல் மாலை 4 மணிவரை திருமண தடை நீங்க யாகம் நடக்கிறது. இந்த யாகத்தில் திருமணத் தடை உள்ளவர்கள் அர்ச்சனை செய்து வழிபட நலம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
* அரசகுமாரன் ஒருவனின் திருமணம் நடைபெற சிவனார் உதவிய தலம்
* கோஷ்ட மூர்த்தங்கள் தனிச்சிறப்புடன்
* அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்தங்கள்
* அம்பாள் முதல் பிரகாரத்தில் தனிக்கோயிலில்
* அம்பாள் கோயிலின் பின்புறம் நவக்கிரக தோஷ நிவர்த்திக்காக வழிபட வேண்டிய ஈசானமூர்த்தி கோயில்
* மூலவர் திருமணக் கோலத்தில் கம்பீரமாக திருக்காட்சி
* குத்தாலம் தலத்தோடு சேர்ந்த தேவார பதிகம்
* சிவனார் பகலில் இத்தலத்திலும், இரவில் அருகிலுள்ள குத்தாலம் தலத்திலும் எழுந்தருளுவதாக ஐதீகம்
* சுந்தரருக்கு குஷ்டம் நீங்கிய தலம். சுந்தரர் இங்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு, தனது குஷ்டத்தை போக்கிகொண்டதாக வரலாறு.
* சிவனார் தன்னில் ஒரு பாகத்தை சக்திக்கு அளித்த தலம்
* தோல் வியாதிகளை போக்கவல்ல தலம்
* அகத்தியர் வாதாபியை கொன்ற பாவம் நீங்கிய தலம்
* பிள்ளையார் திருமணச் சடங்கில் தனக்குத் தானே பூஜை செய்து கொண்ட தலம்
* சிவனார் அம்மைக்கு இடப்பாகம் அளித்த தலம்
* சிவனார் - அம்மையின் திருமணத் தலமாதலால் கொடிமரமும், நவக்கிரகங்களும் இல்லை
* தற்போது பெளர்ணமியன்று கிரக, திருமண , பாப , சாப , மாங்கல்ய தோஷம் நீங்கவும் , புத்திரபாக்யம் பெறவும் யாகம் செய்து மாலை அணிவிக்கப்படுகிறது
* குத்தாலம் , திருவேள்விக்குடி , திருமணஞ்சேரி ஆகிய மூன்று தலங்களில் இத்தலமே கல்யாணத்தலமாகும்
* 1500 ஆண்டுகள் பழமையான கோயில்
* திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் இத்தலத்தின் அருகில் உள்ளது
* மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் முதலான திருவிழாக்கள்
தரிசன நேரம்
காலை 07:00 - 11:00 &
மாலை 05:00 - 07:00
தொடர்புக்கு
04364-235462 ,
99422-39089
மயிலாடுதுறை - மகாராஜபுரம் சாலையில் குத்தாலத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக