வியாழன், 23 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

இருபத்து மூன்றாம் தலம் 

திருவேள்விக்குடி 

மூலவர் - மணவாளேஸ்வரர் 

அம்பாள் - பரிமளசுகந்த நாயகி 

தலமரம் - 
தீர்த்தம் - கெளதுகாபந்தன தீர்த்தம் , 
மங்கள தீர்த்தம்

புராண பெயர் - திருவேள்விக்குடி
தற்போதைய பெயர் - திருவேள்விக்குடி
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், சுந்தரர்

*
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 23வது தலம். 
*
சிவனாரின் திருமண வேள்வி நடந்த தலம் 
*
அம்மைக்கு கங்கண தாரணம் செய்த தலம் ( கெளதுகாபந்தன ஷேத்திரம் )
*
திருமணத் தடை நீக்கவல்ல அற்புதமான தலம் 



*
குத்தாலம் , திருவேள்விக்குடி , திருமணஞ்சேரி தலங்களை ஒரே நாளில் வழிபட திருமணத்தடை விலகும் 








*
சிவனாரின் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் சிவனாரே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார்.
*
நவக்கிரகதோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம். பவுர்ணமி தினத்தில் காலை 10 முதல் மாலை 4 மணிவரை திருமண தடை நீங்க யாகம் நடக்கிறது. இந்த யாகத்தில் திருமணத் தடை உள்ளவர்கள் அர்ச்சனை செய்து வழிபட நலம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. 






*
அரசகுமாரன் ஒருவனின் திருமணம் நடைபெற சிவனார் உதவிய தலம் 
*
கோஷ்ட மூர்த்தங்கள் தனிச்சிறப்புடன் 
*
அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்தங்கள் 
*
அம்பாள் முதல் பிரகாரத்தில் தனிக்கோயிலில் 
*
அம்பாள் கோயிலின் பின்புறம் நவக்கிரக தோஷ நிவர்த்திக்காக வழிபட வேண்டிய ஈசானமூர்த்தி கோயில் 
*
மூலவர் திருமணக் கோலத்தில் கம்பீரமாக திருக்காட்சி 
*
குத்தாலம் தலத்தோடு சேர்ந்த தேவார பதிகம் 

*
சிவனார் பகலில் இத்தலத்திலும், இரவில் அருகிலுள்ள குத்தாலம் தலத்திலும் எழுந்தருளுவதாக ஐதீகம் 
*
சுந்தரருக்கு குஷ்டம் நீங்கிய தலம். சுந்தரர் இங்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு, தனது குஷ்டத்தை போக்கிகொண்டதாக வரலாறு. 
*
சிவனார் தன்னில் ஒரு பாகத்தை சக்திக்கு அளித்த தலம் 
*
தோல் வியாதிகளை போக்கவல்ல தலம் 
*
அகத்தியர் வாதாபியை கொன்ற பாவம் நீங்கிய தலம் 
*
பிள்ளையார் திருமணச் சடங்கில் தனக்குத் தானே பூஜை செய்து கொண்ட தலம் 

*
சிவனார் அம்மைக்கு இடப்பாகம் அளித்த தலம் 
*
சிவனார் - அம்மையின் திருமணத் தலமாதலால் கொடிமரமும், நவக்கிரகங்களும் இல்லை 
*
தற்போது பெளர்ணமியன்று கிரக, திருமண , பாப , சாப , மாங்கல்ய தோஷம் நீங்கவும் , புத்திரபாக்யம் பெறவும் யாகம் செய்து மாலை அணிவிக்கப்படுகிறது 
*
குத்தாலம் , திருவேள்விக்குடி , திருமணஞ்சேரி ஆகிய மூன்று தலங்களில் இத்தலமே கல்யாணத்தலமாகும்
* 1500
ஆண்டுகள் பழமையான கோயில் 
*
திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் இத்தலத்தின் அருகில் உள்ளது
*
மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் முதலான திருவிழாக்கள்

தரிசன நேரம் 

காலை 07:00 - 11:00 &
மாலை 05:00 - 07:00

தொடர்புக்கு 

04364-235462 ,
99422-39089

மயிலாடுதுறை - மகாராஜபுரம் சாலையில் குத்தாலத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக