காவிரி வடகரை தலங்கள்
பதினெட்டாவது தலம்
திருக்கடைமுடி தற்போது கீழையூர், கீழூர், ஏழூர்
மூலவர் - கடைமுடிநாதர்
அம்பாள் - அபிராமியம்மை
தலமரம் - கிளுவை மரம்
தீர்த்தம் - கருணா தீர்த்தம்
புராண பெயர் - திருக்கடைமுடி, கீழூர்,
கிளுவையூர்
தற்போதைய பெயர் - கீழையூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 18வது தலம்.
* பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி
* பிரம்மன் , கண்வர் வழிபட்ட தலம்
* காவிரியாறு வடக்கு முகமாக வந்து மேற்காக ஓடுவது சிறப்பு
* மூவர் சந்நிதி மட்டுமே
* சிவனார் மேற்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி
* தலவிநாயகர் கடைமுடிவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்
* .மேற்கு பார்த்து அமைந்த சிவதலம் இது. காவிரியாறு இத்தலத்தில் மேற்கு நோக்கி ஓடுவது விசேஷம்.
* உற்சவ மூர்த்தங்கள் வெள்நகர் கோயிலில்
* மூலவர் சற்று உயர்ந்த பாணத்துடன் கம்பீரமாக பதினாறு பட்டைகளுடன் அமைந்து 'சோடஷ லிங்க' அமைப்பில் திருக்காட்சி
* தெற்கு நோக்கியிருக்கும் அம்பாள் மிகுந்த வரப்பிரசாதியாக திகழ்கிறார்
* கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி இடது காதில் வளையம் அணிந்தும், வலது காதில் வளையம் இல்லாமலும் காட்சி தருகிறார். இவரைப்போலவே பைரவரும் வலது காதில் வளையம் இல்லாமல் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும்
* மாட்டுப்பொங்கலன்று சுவாமி புறப்பாடு , திருவாதிரை , கார்த்திகை தீபம் , மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம் முதலான விழாக்கள்
* காவிரியாற்றின் கடைமுடித்தலம்
* திருமணத்தடை உள்ளவர்கள் , செய்த தவறுக்கு வருந்துபவர்கள் வழிபடவேண்டிய தலம்
தரிசன நேரம்
காலை 07:00 - 11:00 &
மாலை 05:00 - 08:00
தொடர்புக்கு
04364-283261 ,
04364-283360 ,
94427-79580
மாயவரம் - பூம்புகார் சாலையில் மேலையூர் மேலப்பாதி தாண்டி , கீழையூர் கடந்து சத்திரம் நிறுத்தம் என்ற இடத்தில் இருந்து 2 கிமீ தொலைவிலுள்ளது இச்சிவத்தலம். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம். செம்பொனார் கோயிலில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ளது இந்த பாடல் பெற்ற சிவத்தலம்
பதினெட்டாவது தலம்
திருக்கடைமுடி தற்போது கீழையூர், கீழூர், ஏழூர்
மூலவர் - கடைமுடிநாதர்
அம்பாள் - அபிராமியம்மை
தலமரம் - கிளுவை மரம்
தீர்த்தம் - கருணா தீர்த்தம்
புராண பெயர் - திருக்கடைமுடி, கீழூர்,
கிளுவையூர்
தற்போதைய பெயர் - கீழையூர்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 18வது தலம்.
* பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி
* பிரம்மன் , கண்வர் வழிபட்ட தலம்
* காவிரியாறு வடக்கு முகமாக வந்து மேற்காக ஓடுவது சிறப்பு
* மூவர் சந்நிதி மட்டுமே
* சிவனார் மேற்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி
* தலவிநாயகர் கடைமுடிவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்
* .மேற்கு பார்த்து அமைந்த சிவதலம் இது. காவிரியாறு இத்தலத்தில் மேற்கு நோக்கி ஓடுவது விசேஷம்.
* உற்சவ மூர்த்தங்கள் வெள்நகர் கோயிலில்
* மூலவர் சற்று உயர்ந்த பாணத்துடன் கம்பீரமாக பதினாறு பட்டைகளுடன் அமைந்து 'சோடஷ லிங்க' அமைப்பில் திருக்காட்சி
* தெற்கு நோக்கியிருக்கும் அம்பாள் மிகுந்த வரப்பிரசாதியாக திகழ்கிறார்
* கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி இடது காதில் வளையம் அணிந்தும், வலது காதில் வளையம் இல்லாமலும் காட்சி தருகிறார். இவரைப்போலவே பைரவரும் வலது காதில் வளையம் இல்லாமல் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும்
* மாட்டுப்பொங்கலன்று சுவாமி புறப்பாடு , திருவாதிரை , கார்த்திகை தீபம் , மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம் முதலான விழாக்கள்
* காவிரியாற்றின் கடைமுடித்தலம்
* திருமணத்தடை உள்ளவர்கள் , செய்த தவறுக்கு வருந்துபவர்கள் வழிபடவேண்டிய தலம்
தரிசன நேரம்
காலை 07:00 - 11:00 &
மாலை 05:00 - 08:00
தொடர்புக்கு
04364-283261 ,
04364-283360 ,
94427-79580
மாயவரம் - பூம்புகார் சாலையில் மேலையூர் மேலப்பாதி தாண்டி , கீழையூர் கடந்து சத்திரம் நிறுத்தம் என்ற இடத்தில் இருந்து 2 கிமீ தொலைவிலுள்ளது இச்சிவத்தலம். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம். செம்பொனார் கோயிலில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ளது இந்த பாடல் பெற்ற சிவத்தலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக