வெள்ளி, 10 ஜூலை, 2015

காவிரி வடகரை தலங்கள் 

பதினைந்தாவது தலம்

திருக்கோலக்கா

மூலவர் - சப்தபுரீஸ்வரர் @ திருத்தாளமுடையார் 

அம்பாள் - ஓசை கொடுத்த நாயகி

தலமரம் - கொன்றை 
தீர்த்தம் - ஆனந்த தீர்த்தம் , சூரிய தீர்த்தம்
புராண பெயர் - சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில்
தற்போதைய பெயர் - திருக்கோலக்கா
மாவட்டம் - நாகப்பட்டினம்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர், சுந்தரர்

* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 15 வது தலம்.
* சிவனார் சம்பந்தருக்கு பொற்றாளம் அளித்த தலம் 








* அம்மை அத்தாளத்திற்கு தெய்வீக ஓசை கொடுத்த தலம் 
* அம்பாள் சன்னதி தனிக்கோயிலாக உள்ளது 
* சம்பந்தரின் உற்சவ மூர்த்தம் இரு பொற்றாளங்களையும் கைகளில் ஏந்தி காட்சி 
* சம்பந்தரின் திருத்தல யாத்திரையில் முதல் தலம் 
* அதிகார நந்தி சந்நிதி 
* அகத்தியர் , கண்வர் வழிபட்ட தலம் 
* நரசிம்மரை சரபர் அழித்த பின் லட்சுமி இத்தல இறைவனிடம் வேண்ட, விஷ்ணுவுடன் திருமண கோலத்தில் இருந்திட அருள் செய்த தலம் 
* சூரியனுக்கு நவக்கிரகங்களின் தலைமைப்பதவி கிடைத்த தலம் 
* மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம்

* பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், சூரியன் சன்னதிகள்





* வாய் சரியாய் பேச இயலா குறைதீர வழிபட வேண்டிய தலம் 




* சீர்காழி திருமுலைப்பால் திருவிழா நாளன்று மாலையில் இங்கு வந்தருளும் சம்பந்தருக்கு சிவனார் பொற்றாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது 
* கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக் கிழமை தோறும் தீர்த்தவாரி
* வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, ஓசை நாயகி அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர குணமாகும் என்ற வரலாறு சொல்லப்படுகிறது

தரிசன நேரம் 

காலை 07:00 - 11:30 &
மாலை 04:30 - 08:00

தொடர்புக்கு 

04364-274175
98430-11264

சீர்காழியிலிருந்து சுமார் 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக